தொடர் மழையால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு : பில்லூர் அணையின் நீர்மட்டம் மளமளவென உயர்வு

கோவை: மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் பருவ மழைக் காரணமாக மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளபெருக்கால், பில்லூர் அணையின் நீர்மட்டம் 92 அடியாக உயர்ந்துள்ளது.

கோவை: மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் பருவ மழைக் காரணமாக மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளபெருக்கால், பில்லூர் அணையின் நீர்மட்டம் 92 அடியாக உயர்ந்துள்ளது. 

மேற்கு தொடர்ச்சி மலைக்காட்டின் நடுவே கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே அமைந்துள்ளது பில்லூர் அணை. இவ்வணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான நீலகிரி மாவட்டத்தின் அப்பர் பவானி, அவலாஞ்சி, குந்தா மற்றும் கேரள வனப்பகுதிகளில் பருவமழை பெய்து வருகிறது. இதனால், பில்லூர் அணைக்கான நீர்வரத்து 800 கனஅடியில் இருந்து 3,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. 100 அடி கொள்ளளவு கொண்ட பில்லூர் அணையின் நீர்மட்டம் 85 அடியில் இருந்து 92 அடியாக உயர்ந்தது.

இதனையடுத்து, அணையில் இருந்து மின்சாரம் எடுப்பதற்காக பவானி ஆற்றில் இருந்து 6 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால், மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் இரு கரைகளையும் தொட்டவாறு தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். தொடர்ந்து, மழை பெய்து வருவதால் ஆற்றில் நீர்வரத்து அதிகரிக்கும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Newsletter

வால்பாறையில் தொடர் மழை: பள்ளி மாணவர்கள், எஸ்டேட் தொழிலாளர்கள் கடும் அவதி

வால்பாறை மற்றும் சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் இரவு முழுவதும் பெய்த கனமழை இன்று காலையிலும் நீடித்ததால், பள்ளி மாணவர்கள...

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...