பல்லடம் அருகே காலிக்குடங்களுடன் பெண்கள் முற்றுகைப் போராட்டம்

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே சீரான குடிநீர் விநியோகம் செய்யாததைக் கண்டித்து ஊராட்சிமன்ற அலுவலகத்தை 100-க்கும் மேற்பட்ட பெண்கள் காலிக்குடங்களுடன் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே சீரான குடிநீர் விநியோகம் செய்யாததைக் கண்டித்து ஊராட்சிமன்ற அலுவலகத்தை 100-க்கும் மேற்பட்ட பெண்கள் காலிக்குடங்களுடன் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். 

பல்லடத்தை அடுத்த சித்தம்பலம் கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில், இந்த கிராமத்திற்கு கடந்த 3 மாதங்களாக சீரான குடிநீர் வழங்கவில்லை எனத் தெரிகிறது. இதனைத் தொடர்ந்து, கிராம மக்கள் பல முறை அரசு அதிகாரிகளிடம் மனு அளித்துள்ளனர். தங்களது தேவைக்கு தண்ணீரை விலை கொடுத்து வாங்கிப் பயன்படுத்தி வந்துள்ளனர். பலமுறை மனு அளித்தும் அரசு அதிகாரிகள் எந்தவிதமான நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர். 

இந்த நிலையில், ஆத்திரமடைந்த கிராம மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் காலிக்குடங்களுடன் பல்லடம் ஊராட்சிமன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து, கிராம ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலர் கந்தசாமியை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய வட்டார வளர்ச்சி அலுவலர், கூடிய விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததைத் தொடர்ந்து, கிராம மக்கள் கலைந்து சென்றனர்.

Newsletter

விவசாய நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் விற்றவர் கைது - கோவை குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை

அரசு வழங்கிய பட்டியலினருக்கான விவசாய நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் விற்பனை செய்து ஏமாற்றியதாக எழுந்த புகாரில், கவுண்டம்பாள...

கோவை மாவட்ட நீதிமன்றங்களுக்கு 20 தற்காலிக அரசு வழக்கறிஞர்கள் நியமனம்

கோவை மாவட்டத்திலுள்ள பல்வேறு நீதிமன்றங்களில் அரசு தரப்பில் ஆஜராக 20 தற்காலிக அரசு வழக்கறிஞர்களை தமிழக அரசு நியமித்துள்ளத...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...