மரபணு மாற்ற கடுகு விதையை அனுமதிக்க எதிர்ப்பு: வலுக்கும் போராட்டம்

மரபணு மாற்றம் செய்யப்பட்ட கடுகு விதை வகைகளுக்கு அனுமதி வழங்க மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு எதிராக விவசாயிகள் மற்றும் விவசாய அமைப்புகள் நாடெங்கிலும் பல்வேறு பகுதிகளில் போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர்.

'விதை சத்தியாகிரகம்' என பெயரிடப்பட்டுள்ள இந்த போராட்டம், தமிழகத்தின் தலைநகர் சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்றது.

இந்த போராட்டங்கள் இந்திய அளவில் 145 இடங்களிலும், அவற்றில் தமிழகப் பகுதிகளில் மட்டும் 45 இடங்களில் நடைபெற்றதாக பிபிசி தமிழோசையிடம் பேசிய விவசாயி பார்த்தசாரதி தெரிவித்தார்.

சென்னையில் இந்த போராட்டங்களுக்கு இடையே பாரம்பரிய விதை திருவிழா ஒன்றுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.



இந்திய திரைப்படத்துறையை சேர்ந்த பலரும் கூட இந்த போராட்டங்களில் பங்கேற்றார்கள்.

அந்த வகையில் தேசிய விருதுகளை பெற்றுள்ள இயக்குனர் வெற்றிமாறன், இன்று சென்னையில் நடைப்பெற்ற போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து அதில் கலந்து கொண்டனர். இது குறித்து பிபிசி தமிழோசையிடம் பேசிய அவர், சாமானியர்களின் அடிப்படை உரிமையை பறிக்கும் உரிமை யாருக்கும் கிடையாது என்பதால் தான் இந்த போராட்டத்திற்கு துணை நிற்பதாக கூறினார்.



மரபணு மாற்று கடுகு விதைகளுக்கு அனுமதி வழங்கும் விவகாரத்தில் மத்திய அரசாங்கம் தவறான அணுகு முறையை கடைப்பிடிப்பதாக விவசாயிகள் கூறுகின்றனர்.

2010-ஆம் ஆண்டு இந்தியாவில் மரபணு மாற்றப்பட்ட கத்திரிக்காய் அறிமுகம் செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போது தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் கொடுத்த அழுத்தங்கள் காரணமாக மத்திய அரசு அந்த திட்டத்தை கைவிட்டது.



இதே போன்ற விவகாரங்கள் தொடர்கதையாக தொடர்வதை ஏற்க முடியாது என்று இன்றைய போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் திரைப்பட நடிகை ரோகிணி தெரிவித்தார்.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...