சசிகுமார் கொலை: சிபிசிஐடி போலீஸ் சந்தேகிக்கும் நான்கு நபர்கள்


கோவையில் இந்து முன்னணி பிரமுகர் படுகொலை வழக்கில் கண்காணிப்பு கேமராக்களில் பதிவான சந்தேகப்படும் நபர்களின் புகைப்படங்களை சிபிசிஐடி காவல் துறையினர் வெளியிட்டுள்ளனர்.

கோவை சுப்பிரமணியபாளையம் பகுதியில் கடந்த செப்டம்பர் மாதம் 22 ம் தேதி இந்து முன்னணி அமைப்பின் செய்தி தொடர்பாளர் சசிகுமார் மர்மநபர்களால் வெட்டி படுகொலை செய்யபட்டார். இந்த கொலை வழக்கு தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட காவல் துறையினர், 8 தனிப்படைகளை அமைத்து கொலையாளிகளை தேடி வந்தனர். 

ஆனால் காவல் துறையினர் விசாரணையில் எந்த முன்னேற்றமும் ஏற்படாதை அடுத்து, இந்த வழக்கை சிபிசிஐடி காவல் துறை விசாரணைக்கு மாற்றி காவல் துறை தலைவர்ராஜேந்திரன் உத்தரவிட்டார். இதையடுத்து கோவைக்கு வருகை தந்த சி.பி.சி.ஐ.டி பிரிவுஏ.டி.ஜி.பி கரண் சின்ஹா மேற்கு மண்டலகாவல் துறையினரிடம் வழக்கு தொடர்பானஆவணங்களை பெற்றுக் கொண்டு விசாரணையை துவக்கினார். இதையடுத்து சசிகுமார் செல்போன் அழைப்புகள் மற்றும் கொலை நடந்த நாளான்று கோவை மாவட்ட பாஜக அலுவலகத்தில் இருந்து சுப்பிரமணியபாளையம் வரை சாலையில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை கொண்டு சிபிசிஐடி காவல் துறையினர் விசாரணை நடந்தி வந்தனர். 

இந்நிலையில் காந்திபுரம் பகுதியில் சசிகுமார் கொலை வழக்கில் சந்தேகப்படும் படியாக நடமாடிய நபர்கள் கண்காணிப்பு கேமராக்களில் பதிவான முக்கியமான 14 புகைப்படங்களை சிபிசிஐடி காவல் துறையினர் வெளியிட்டுள்ளனர். இந்த புகைப்படங்களில் உள்ள நபர்கள் குறித்த தகவல்களை சிபிசிஐடி காவல் துறையினருக்கு தெரியபடுத்துமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ள காவல் துறையினர், [email protected] மின்னஞ்சல் முகவரியிலும் தெரியபடுத்தலாம் என அறிவித்துள்ளனர்.











Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...