சீனாவில் 5ஜி தொலைத்தொடர்பு சேவைக்கான சோதனை முயற்சி தொடக்கம்

பீஜிங்: இந்திய தொலைத்தொடர்புத்துறை 4ஜி எனப்படும் அதிவிரைவு சேவையை தற்போது வழங்கிவரும் நிலையில் வரும் 2020-ம் ஆண்டுக்குள் 5ஜி எனப்படும் ஐந்தாம் தலைமுறைக்கான தொலைத்தொடர்பு சேவையை தங்கள் நாட்டு மக்களுக்கு வழங்க சீனா தீர்மானித்துள்ளது. அதற்கான முதற்கட்ட சோதனையில் சீனா இறங்கியுள்ளது.

தற்போதைய நிலவரப்படி சீனாவில் உள்ள சுமார் 130 கோடி மக்கள் கைபேசிகளை பயன்படுத்தி வருகின்றனர். இவர்களில் 30 சதவீதம் பேர் 4ஜி சேவை இணைப்புகளை பெற்றுள்ளனர். வினாடிக்கு ஒரு ஜிபி வேகத்தில் செயலாற்றும் இந்த 4ஜி இணைப்பைவிட அதிகவேகம் கொண்டது இந்த 5ஜி சேவை இது வினாடிக்கு 20 ஜபி வரை அதிவேகமாக இயங்கக்கூடியதுமான 5ஜி இணைப்பை தங்கள் நாட்டு மக்களுக்கு விரைவாக அறிமுகப்படுத்த சீனா திட்டமிட்டுள்ளது.

கைபேசி வாடிக்கையாளர்கள் தங்களுக்கு தேவையான தகவலைப்பெற விரும்பும்போது தற்போது 4ஜி இணைப்பின் மூலமாக பெற 10 மில்லிவினாடி நேரம் தேவைப்படுகிறது. ஆனால் இதே தகவலை 5ஜி இணைப்பின் வழியாக ஒரே மில்லிவினாடியில் பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

சீனாவில் உள்ள 100 முக்கிய பெருநகரங்களில் இந்த 5ஜி சேவையை தொடங்குவதற்கான சிக்னல் கோபுரங்கள் மற்றும் தொலைத்தொடர்பு பரிமாற்ற கட்டுப்பாட்டு மையங்களை அமைக்கும் சோதனைரீதியான முதல்கட்ட முயற்சியில் சீனா தற்போது களமிறங்கி உள்ளதாக அந்நாட்டின் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Newsletter

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...