ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து மருத்துவமனைக்கு ராகுல் காந்தி நேரில் சென்றார்

தமிழக முதல்வர் ஜெயலலிதா  சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கபட்டதிலிருந்து காய்ச்சசல், நீர்சத்து குறைவு மற்றும் நோய் தொற்று உள்ளிட்ட பல்வேறு உபாதைகளால் அவர் தொடர் சிகிச்சை பெற வேண்டும் என மருத்துவமனை நிர்வாக அறிக்கைகள் வெளியிட்டது. இந்நிலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வரும் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து கேட்டறிய, ராகுல் காந்தி இன்று திடீர் பயணமாக சென்னை வந்துள்ளார். இப்பயணம் முன்கூட்டியே திட்டமிடப்படாத திடீர் பயணமாகவே கருதப்படுகிறது. ராகுல் காந்தியின் வருகையை முன்னிட்டு, சென்னை அப்பல்லோ மருத்துவமனையிலும், அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.



சென்னை அப்போலோ மருத்துமனையில் கடந்த 2 வாரங்களுக்கு முன் தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை காய்ச்சசல் மற்றும் நீர்சத்து குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இன்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி சிறப்பு விமானம் மூலம் சென்னைக்கு வந்த  முதல்வர் ஜெயலலிதா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள அப்போலோ மருத்துவமனைக்கு நேரில் சென்று ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து மருத்துவர்களை நேரடியாக கேட்டறிந்தார். ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து மருத்துவர்கள் குழு, ராகுல் காந்தியிடம் விளக்கினர். 

சென்னை அப்போலோ மருத்துமனை சென்று ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் விசாரித்த பின், முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலையில் முன்னனேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், ஜெயலலிதா குணமடைந்து வருவதாக மருத்துவர்கள் குறிப்பிட்டதாக தெரிவித்தார். விரைவில் அவர் நலம் பெறுவார் என்றும் ராகுல் காந்தி நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும் ஜெயலலிதா விரைவில் குணமடைய காங்கிரஸ் சார்பில் வாழ்த்து தெரிவித்து கொள்வதாக கூறினார். அவர் இவ்வாறு கூறியுள்ளார். 

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசரும், ராகுல் காந்தியுடன் மருத்துமனைக்கு வந்திருந்தார்.

Newsletter

பர்மிட் தாமதம், கட்டண குழப்பம்: அமைச்சர் மீது ஆம்னி உரிமையாளர்கள் சாடல்

ஆம்னி பேருந்து அதிக கட்டண வசூல் குற்றச்சாட்டு தொடர்பாக அமைச்சர் இன்றுவரை பேச்சுவார்த்தை நடத்தவில்லை என உரிமையாளர் சங்கம்...

கோவையில் சிறுமி பாலியல் வன்கொடுமை: ஆய்வாளரை தாக்கிய கைதான நபரை சுட்டுப் பிடித்த போலீசார்

செப். 12-ஆம் தேதி கோவையில் சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், அதில் ஒருவ...

கோவையில் கதவை பூட்டாமல் தூங்கிய மாணவர்கள்: 4 லேப்டாப், 3 செல்போன்கள் திருட்டு

கோவை குனியமுத்தூர் சுகுணாபுரம் வாடகை வீட்டில் தங்கியிருந்த கல்லூரி மாணவர்கள் கதவை பூட்டாமல் தூங்கியதை பயன்படுத்தி நள்ளிர...

கோவையில் சட்டவிரோத மது விற்பனை: 119 மதுபாட்டில்கள் பறிமுதல், 4 பேர் கைது

கோவை மாநகரில் அரசு அனுமதியின்றி கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்த பெண் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். மதுவிலக்கு அமல...

கோவையில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 4085 வழக்குகளுக்கு தீர்வு

கோவை மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 27 அமர்வுகளில் 4085 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் காலை இழந...

கொடுங்குற்ற வழக்குகளில் குடும்பத்தினருடன் நேரடித் தொடர்புக்கு FLPO: கோவை மாநகர காவல்துறையின் புதிய முன்னெடுப்பு

பாலியல் குற்றங்கள், POCSO, கடத்தல், கொலை, சந்தேக மரணம் உள்ளிட்ட கொடுங்குற்ற வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்...