ஆளுநரின் நடவடிக்கைக்கு ஸ்டாலின் வரவேற்பு: மாநில நலனுக்கான மாற்று ஏற்பாடு என கருத்து


சென்னை: முதலமைச்சரின் இலாக்காக்கள் நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஒதுக்கப்பட்டிருப்பதை திமுக உட்பட பல்வேறு கட்சிகள் வரவேற்றுள்ளனர். எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாநில நிர்வாக நலன் கருதி தமிழக ஆளுநர் எடுத்துள்ள இந்நடவடிக்கையை வரவேற்பதாக தெரிவித்துள்ளார். முதலமைச்சர் நலம்பெற்று திரும்பும்வரை தமிழகத்தின் நலன் கருதி மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் என தி.மு.க. தலைவர் கருணாநிதி வலியுறுத்தியதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அமைச்சரவை கூட்டத்துக்கு ஓ.பன்னீர்செல்வம் தலைமை வகிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளதால், காவிரி உள்ளிட்ட பிரச்சனைகளில் அமைச்சரவையைக் கூட்டி முக்கிய முடிவெடுக்க முடியும் என்று அவர் கூறினார்.

ஆளுநரின் நடவடிக்கைக்கு விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல்.திருமாவளவனும் வரவேற்றுள்ளார். பாஜக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு கட்சியினரும் ஆளுநரின் நடவடிக்கைக்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர். தமிழக நலனை கருத்தில் கொண்டு நிதி அமைச்சர் உரிய முடிவு எடுக்க வேண்டும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

சிங்காநல்லூர் தொகுதி: மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்க்கு ஆவாரம்பாளையத்தில் வாக்கு சேகரிப்பு

சிங்காநல்லூர் தொகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஸ்ரீநிதி மோகனுக்கு ஆதரவாக ஆவாரம்பாளையம் பகுதியில் தீவிர...

“நாங்கள் கட்சிக்காக வாக்கு கேட்கவில்லை; அடுத்த தலைமுறைக்காக வாக்கு கேட்கிறோம்” – கோவையில் சுப. வீரபாண்டியன் விமர்சனம்

கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதியில் செந்தில் பாலாஜியை ஆதரித்து, திராவிடர் இயக்க தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப. வீரபாண்டி...

சிங்காநல்லூர் தொகுதி: மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஸ்ரீநிதி மோகனுக்கு ஆவாரம்பாளையத்தில் வாக்கு சேகரிப்பு

சிங்காநல்லூர் தொகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஸ்ரீநிதி மோகனுக்கு ஆதரவாக ஆவாரம்பாளையம் பகுதியில் தீவிர...

சூலூர்: “சொந்தக் குடும்பத்தினரையே சந்திப்பதில்லை; இதில் எங்களை எப்படி சந்திப்பார் என்று நம்புவது”- தவெக வெட்பாளரிடம் பெண்கள் சரமாரி கேள்வி.

சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கண்ணம்பாளையம் வாரச்சந்தையில், தவெக வேட்பாளர் என்.எம். சுகுமார் பிரச்சாரத்தின் போது, விஜ...

தாராபுரம்: “கொங்கு மண்டலம் புறக்கணிப்பு; 5 ஆண்டுகளாக திராவிட மாடல் ஆட்சியில் ஒரு பிரச்சனைக்கும் தீர்வு இல்லை” – அர்ஜுன் சம்பத் குற்றச்சாட்டு

தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் சத்தியபாமாவுக்கு ஆதரவாக இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் பி...

கோவை: மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்கு பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில், இந்த பணிக்காக 160-க்கும் மேற்பட்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 9000-க்கும...