பாம்போர் என்கவுண்டர் 3-வது நாளை எட்டியது, 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை, துப்பாக்கி சண்டை தொடர்கிறது

ஸ்ரீநகர்,

பாம்போரின் பயங்கரவாதிகளை வேட்டையாடும் நடவடிக்கையானது 3-வது நாளை எட்டியது. இதுவரையில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டு உள்ளனர். மேலும் ஒரு பயங்கரவாதி கட்டிடத்திற்குள் மறைந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

காஷ்மீர் மாநிலம், ஸ்ரீநகர்–ஜம்மு தேசிய நெடுஞ்சாலையில் பாம்போர் என்ற இடத்தில் அரசுக்கு சொந்தமான தொழில் முனைவோர் மேம்பாட்டு கழக கட்டிடம் உள்ளது.  இந்த கட்டிடத்திற்குள் நேற்று முன்தினம் பயங்கரவாதிகள் புகுந்தனர். அதைத்தொடர்ந்து போலீஸ், பாதுகாப்பு படையின் கவனத்தை கவர்வதற்காக அவர்கள் அங்குள்ள விடுதியின் மெத்தைகளை தீயிட்டு கொளுத்தினர். அதையடுத்து பாதுகாப்பு படையினர் அங்கு விரைந்து சென்று சுற்றி வளைத்து தாக்குதல் தொடுத்தனர். சண்டையில் ராணுவ வீரர் ஒருவர் காயம் அடைந்தார். 

பயங்கரவாதிகளை அழிக்க பாதுகாப்பு படையினர் சிறிய மோட்டார் துப்பாக்கிகள் மற்றும் சிறிய ரக ஆயுதங்களை பயன்படுத்தினர். ஆனால் பலன் அளிக்கவில்லை. இந்த நிலையில் நேற்று அங்கு 2–வது நாளாக துப்பாக்கி சண்டை நீடித்தது. ஒரு பயங்கரவாதி கொல்லப்பட்டான். இன்னும் அந்த கட்டிடத்துக்குள் 2 பயங்கரவாதிகள் பதுங்கி இருக்கலாம் என்று கூறப்பட்டது. இருள் காரணமாக சண்டை நேற்றிரவு நிறுத்தப்பட்டாலும், இன்று (புதன்கிழமை) 3–வது நாளாக சண்டை நடைபெற்று வருகிறது. இன்று மேலும் ஒரு பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டான். 

இன்னும் ஒரு பயங்கரவாதி கட்டிடத்திற்குள் மறைந்து இருக்கலாம் என்று ராணுவம் தரப்பில் கூறப்படுகிறது. இருதரப்பு சண்டையானது தொடர்ந்து நீடித்து வருகிறது, பாதுகாப்பு படையினர் கட்டிடத்தின் ஒருபகுதிக்குள் நுழைந்துவிட்டனர், அவர்கள் ஒவ்வொரு அடியையும் பத்திரமாக எடுத்து வைத்து எதிர்தாக்குதல் நடத்தி வருகின்றனர் என்று பாதுகாப்பு படை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. சுமார் 52 மணி நேரங்களுக்கு மேலாக நடைபெற்று வரும் சண்டையில் அரசு கட்டிடம் பெரிதும் சேதம் அடைந்து உள்ளது. கட்டிடம் எழும்பு கூடாக காட்சி அளிக்கிறது. கட்டிடம் தீ பிடித்து எரிந்தும், சுவர்கள் சரிந்தும் புகைமூட்டமாக காணப்படுகிறது.



கூடுதல் பாதுகாப்பு படையினர் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். 

கடந்த பிப்ரவரி மாதமும் இக்கட்டிடம் பயங்கரவாத தாக்குதலுக்கு இலக்கானது. இத்தாக்குதலில் இரு ராணுவ அதிகாரிகள் உள்பட 5 பேர் உயிரிழந்தனர். சுமார் 48 மணி நேரம் நீடித்த சண்டையில் மூன்று லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...