பேரிடர் காலங்களில் பாதுகாப்பு பணி தயார் நிலையில் இருக்க வேண்டும் - ஜெனரல் மார்வோ

கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் வளர்ச்சி மன்ற கூட்ட அரங்கில் இன்று மாவட்ட ஆட்சித்தலைவர் ஹரிஹரன் முன்னிலையில் பேரிடர் காலங்களில் மேற்கொள்ளவேண்டிய பணிகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணைய உறுப்பினர் லெப்டினல் ஜெனரல் மார்வோ தலைமையில் நடைபெற்றது. 




இக்கூட்டத்தில் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணைய உறுப்பினர் லெப்டினல் ஜெனரல் மார்வோ பேசுகையில்:-
பேரிடர் காலங்களில் மாவட்டத்தில் எவ்வித பாதிப்புகள் வராத வண்ணம் முழுமையாக கண்காணிப்பில் ஈடுபட்டும், குறிப்பாக மழைக்காலங்களில் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தங்குவதை முன் கூட்டியே தெரிந்து கொண்டு, அப்பகுதியில் தண்ணீர் தேங்காமல் உடனுக்குடன் வடிந்திடும் அளவிற்கு வாய்க்கால் பகுதிகளை சீர் செய்து தயார் நிலையில் வைத்துக்கொள்ளவும், நீர் ஓடைப்பகுதிகள், குளங்கள் ஆகியவற்றில் நீர்நிலை தன்மை குறித்து கண்காணித்தும், அதுமட்டுமின்றி தாழ்வான பகுதிகளில் திடீர் என தண்ணீர் தேங்கும் பட்சத்தில் பொதுமக்களை பாதுகாக்கும் வகையில் படகுகள் போன்ற பாதுகாப்பான உபகரணங்களை தயார் நிலையில் வைத்துக்கொள்ளவும், தீ விபத்து, நிலச்சரிவு, வெள்ளப்பெருக்கு ஆகிய காலங்களில் தங்களை தாங்களே பாதுகாப்பதன் மட்டுமின்றி தம்மை சார்ந்துள்ள வரையும் பாதுகாக்க பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், தாலுக்கா அளவில் அனைத்துத்துறை அலுவலர்களை கொண்டு பேரிடர் ஆய்வுக்குழு அமைத்து கண்காணிக்கவும்.

மேலும், பொதுமக்களுக்கு நோய்த்தொற்று ஏற்படாத வண்ணம்  சுகாதாரத்துறையின் மூலம் மருத்துவக்குழு தயார் நிலையில் வைத்துக்கொள்வதுடன் பொதுமக்களுக்கு மழைக்காலங்களில் காய்ச்சிய குடிதண்ணீரை பயன்படுத்துமாறு அறிவுரை வழங்கவும்,  காவல்துறை, தீயணைப்புத்துறை ஆகியவை ஒன்றினைந்து பாதுகாப்பு பணிகள் மேற்கொள்வதன் மட்டுமின்றி அனைத்துத்துறை அலுவலர்களையும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களையும் ஒன்றினைந்து செயல்பட வேண்டும் என அவர் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரம்யாபாரதி, மாவட்ட வருவாய் அலுவலர் கிருஸ்துராஜ், பொள்ளாச்சி சார் ஆட்சியர் காயத்ரிகிருஷ்ணன், பயிற்சி ஆட்சியர் பிரியங்கா, வருவாய் கோட்டாட்சியர்கள் சின்னச்சாமி, சுரேஷ், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது)சிதம்பரம் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...