காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க பாராளுமன்ற ஒப்புதல் தேவையில்லை- தமிழ்நாடு மூத்த பொறியாளர்கள் சங்கம்

காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின் அடிப்படையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படலாம் எனவும் இதற்கு பாராளுமன்றத்தின் ஒப்புதல் பெற தேவையில்லை எனவும் தமிழ்நாடு மூத்த பொறியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

கோவையில் தமிழ்நாடு மூத்த பொறியாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

பன்மாநில நதிநீர் வழக்கு சட்டம் 1956 உட்பிரிவு 6 ன்படி காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்பட்டுள்ளது. அதே சட்டத்தின் உட்பிரிவுகள் 6 ஏ (1) மற்றும் 6 (2)- யின்படி பாராளுமன்றத்தின் மேற்பார்வைக்கு அனுப்பப்படாமலேயே காவிரி மேலாண்மை  வாரியம் அமைக்கப்படலாம். இதற்கு முன்னுதாரணங்களாக நர்மதா நதி கட்டுப்பாட்டு ஆணையம் மற்றும் கிருஷ்ணா - கோதாவரி நதிகளின் மேலாண்மை வாரியங்கள் பாராளுமன்ற ஒப்புதலின்றி அமைக்கப்பட்டுள்ளது ஆகும். எனவே காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மத்திய அரசுக்கு முழு உரிமை உண்டு. பி.ஏ.பி வாய்க்கால் திட்டத்தில் எழும் விவகாரங்களை இரு மாநில அதிகாரிகள் மட்டத்திலேயே தீர்க்கப்பட்டு வருவதை அரசு கருத்தில் கொள்ள வேண்டும்.

இந்த விவகாரத்தில் மத்திய அரசு தமிழகத்திற்கு ஓரவஞ்சனையுடன் செயல்பட்டு வருகிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்த தமிழக அரசுக்கு முழு உரிமை உண்டு என தெரிவித்தனர்.

Newsletter

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...

கட்டாஞ்சிமலை: குட்டையில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் குட்டையில் காருடன் மூழ்கி 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து ப...

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...

கோவையில் இன்று மாலை காவல்துறை கொடி அணிவகுப்பு - போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, கோவை மாநகர காவல்துறை இன்று (02.05.2026) மாலை 4.00 மணி முதல் 5.30 ம...

SRIT-ன் கண்டுபிடிப்பு நடைமுறை தேசிய அளவிலான காபி டேபிள் புத்தகத்தில் இடம்பெற்றது

கோயம்புத்தூரில் உள்ள Sri Ramakrishna Institute of Technology-ன் கல்வி கண்டுபிடிப்பு நடைமுறை "The Higher Education Playbo...

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...