இரண்டாவது நாளாக ரயில் மறியல்: 17 ஆயிரம் பேர் கைது

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி, விவசாயிகள், தி.மு.க., - காங்., உள்ளிட்ட அரசியல் கட்சிகள், நேற்று இரண்டாவது நாளாக, ரயில் மறியல் போராட்டம் நடத்தியதால், ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சென்னை எழும்பூர், கடற்கரை, சென்ட்ரல் ரயில் நிலையங்களில், தொடர்ந்து இரண்டாவது நாளாக மறியல் போராட்டம் நடந்தது. இதனால், ரயில் போக்கு வரத்து பாதிக்கப்பட்டதால், பயணிகள் அவதி அடைந்தனர். வி.சி., தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். வெஸ்ட்கோஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில், 30 நிமிடம் தாமதமாக புறப்பட்டது.

தள்ளுமுள்ளு: அரியலுார் மாவட்டம் செந்துறை ரயில் நிலையத்தில், குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயிலை மறிக்க சென்றனர். போலீசார் தடுத்து நிறுத்தியதால், ரயில் நிலையம் முன், இருதரப்பினரிடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது; 159 பேர் கைது செய்யப்பட்டனர். தஞ்சாவூர் ரயில் நிலையத்தில், தி.மு.க., - கம்யூ., கட்சியினர் ரயிலை மறித்தும், தண்ட வாளத்தில் சமைத்தும் போராட்டம் நடத்தினர். கும்பகோணம், ஆயக்குடி போன்ற இடங்களில் மறியலில் ஈடுபட்ட, 2,000 பேர் கைது செய்யப்பட்டனர். மைசூரு - திருச்சி ரயிலை மறித்து, த.மா.கா.,வினர் போராட்டம் நடத்தினர். திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர், நன்னிலம், கொரடாச்சேரி, நீடாமங்கலம் ஆகிய ஊர்களில், மறியல் போராட்டம் நடந்தது.

கஞ்சித்தொட்டி: நாகை மாவட்டம் மயிலாடுதுறை மற்றும் குத்தாலத்திலும், சீர்காழியில் நடந்த மறியலிலும், தி.மு.க., - ம.தி.மு.க., - கம்யூ., கட்சியினர் கைது செய்யப்பட்டனர். சீர்காழி யில், கட்சியினர் தண்டவாளத்தில் படுத்தும், விவசாயிகள், ரயில் பாதையில் கஞ்சித்தொட்டி திறந்தும் போராட்டம் நடத்தினர். மாநிலம் முழுவதும், ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட, 17 ஆயிரம் பேரை போலீசார் கைது செய்து, மாலையில் விடுவித்தனர்.

3 எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து: தமிழகத்தில், நேற்று இரண்டாவது நாளாக நடந்த ரயில் மறியல் போராட்டத்தால், கோவை - மன்னார்குடி; சென்னை எழும்பூர் - திருச்சி சோழன்; திருச்சி - எழும்பூர் சோழன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. பாதியில் ரத்து: வேளாங்கண்ணி - வாஸ்கோட காமா; வாஸ்கோட காமா - வேளாங்கண்ணி எக்ஸ்பிரஸ் ரயில்கள், தஞ்சை - வேளாங்கண்ணி இடையே ரத்து செய்யப்பட்டன. மன்டுவாடி - ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ், விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி வழியாக மாற்று பாதையில் இயக்கப்பட்டது.

Newsletter

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...

கட்டாஞ்சிமலை: குட்டையில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் குட்டையில் காருடன் மூழ்கி 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து ப...

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...

கோவையில் இன்று மாலை காவல்துறை கொடி அணிவகுப்பு - போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, கோவை மாநகர காவல்துறை இன்று (02.05.2026) மாலை 4.00 மணி முதல் 5.30 ம...

SRIT-ன் கண்டுபிடிப்பு நடைமுறை தேசிய அளவிலான காபி டேபிள் புத்தகத்தில் இடம்பெற்றது

கோயம்புத்தூரில் உள்ள Sri Ramakrishna Institute of Technology-ன் கல்வி கண்டுபிடிப்பு நடைமுறை "The Higher Education Playbo...

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...