ராணுவ வீரர்களுக்கான ஆட்தேர்வு முகாம்- கோவையில் குவிந்த இளைஞர்கள்

கோவையில் ராணுவ வீரர்களுக்கான ஆட்தேர்வு முகாம் புதனன்று (இன்று) துவங்கி நடைபெற்று வருகிறது. இதற்காக, பல்வேறு மாநிலங்களில் இருந்தும் இளைஞர்கள் கோவையில் குவிந்துள்ளனர்.

சென்னை 110 ராணுவ பட்டாலியன் மேற்பார்வையில் பிராந்திய ராணுவப்படை வீரர்களுக்கான ஆட்தேர்வு முகாம், கோவை காவலர் பயிற்சிப் பள்ளி மைதானத்தில் புதனன்று அதிகாலை துவங்கியது. இதில் தமிழகம், ஆந்திரா, கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, பாண்டிச்சேரி என இராஜஸ்தான் முதல் லக்க்ஷதீப் வரை உள்ள 14 மாநிலங்களைச் சேர்ந்த 4 ஆயிரத்தி 500க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்கேற்றுள்ளனர். 

முன்னதாக தேர்வில் கலந்துகொள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் மைதானத்தை சுற்றி காத்திருந்ததால் காவல் துறையினர் அவர்களை கட்டுப்படுத்தும் பணியில் செவ்வாயன்று இரவு முதல் ஈடுபட்டனர். கர்னல்.லோகநாதன் தலைமையில் நடத்தப்பட்டு வரும் இம்முகாமில், முதற்கட்டமாக இளைஞர்களின் உடற்தகுதி தேர்வான ஓட்டப் பந்தயம், நீலம் தாண்டுதல் போன்ற தேர்வுகள் நடத்தப்படுவதுடன் அவர்களின் எடை, உயரம் உள்ளிட்ட உடற்தகுதிகளும் மற்றும் கல்விச் சான்றிதழ்கள் சரிபார்க்கும் பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

இன்று நடைபெறும் தேர்வில், தேர்ச்சிபெறும் இளைஞர்கள் அடுத்து மருத்துவ சோதனைகள் மற்றும் நேர்முக தேர்வுகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்ற 23 ஆம் தேதிக்குள் தேர்வு செய்யப்பட உள்ளனர். 

4 ஆயிரத்தி 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ள இந்த பிராந்திய ராணுவப் படை வீரர்களுக்கான தேர்வில் 23 வீரர்களும், ஒரு ராணுவ மெஸ் பணியாளரும் தேர்வு செய்யப்படுவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் அறிவிப்பு

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் நண்பகல் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்...

புலியகுளம் முந்தி விநாயகர் கோவிலில் 50 கிலோ சந்தனத்தில் விநாயகருக்கு ராஜ அலங்காரம்

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவை புலியகுளம் முந்தி விநாயகர் கோவிலில் 50 கிலோ சந்தனம் மற்றும் இரண்டு டன் மலர்களால் ரா...

வரசித்தி விநாயகருக்கு வெள்ளி கவசம் - ரூ.10 லட்சம் நோட்டுகளால் அலங்காரம்

விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் அருள்மிகு வரசித்தி விநாயகர் ஆலயத்தில் விநாயக பெருமானுக்கு வெ...

பர்மிட் தாமதம், கட்டண குழப்பம்: அமைச்சர் மீது ஆம்னி உரிமையாளர்கள் சாடல்

ஆம்னி பேருந்து அதிக கட்டண வசூல் குற்றச்சாட்டு தொடர்பாக அமைச்சர் இன்றுவரை பேச்சுவார்த்தை நடத்தவில்லை என உரிமையாளர் சங்கம்...

கோவையில் சிறுமி பாலியல் வன்கொடுமை: ஆய்வாளரை தாக்கிய கைதான நபரை சுட்டுப் பிடித்த போலீசார்

செப். 12-ஆம் தேதி கோவையில் சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், அதில் ஒருவ...

கோவையில் கதவை பூட்டாமல் தூங்கிய மாணவர்கள்: 4 லேப்டாப், 3 செல்போன்கள் திருட்டு

கோவை குனியமுத்தூர் சுகுணாபுரம் வாடகை வீட்டில் தங்கியிருந்த கல்லூரி மாணவர்கள் கதவை பூட்டாமல் தூங்கியதை பயன்படுத்தி நள்ளிர...