ஜம்மு-காஷ்மீரில் இந்தியா-சீன கூட்டு ராணுவப் பயிற்சி

புதுடில்லி: இந்திய-சீன கூட்டு ராணுவப் பயிற்சி ஜம்மு காஷ்மீரில் நேற்று நடைபெற்றது.

கூட்டு ராணுவப் பயிற்சி:

இதுகுறித்து இந்திய ராணுவம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியா-சீனா இடையேயான முதலாவது கூட்டு ராணுவ பயிற்சி, கடந்த பிப்.,6ல் சீனாவின் கிழக்கு லடாக்கின் ஹட் பகுதியில் நடைபெற்றது. இதனை தொடர்ந்து இந்தியாவில், ஜம்மு-காஷ்மீரில் நேற்று கூட்டு ராணுவ பயிற்சி நடைபெற்றது.

இயற்கை பேரழிவுகளில்:

இதில் எல்லையோர கிராமங்களில் இயற்கை பேரழிவுகள் ஏற்படும்போது உதவிகள் செய்வதற்கு இரு நாட்டு வீரர்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டது. இப்பயிற்சிக்கு இந்திய வீரர்களுக்கு பிரிகேடியர் ஆர்.எஸ்.ராமனும், சீனப் படைக்கு சீனியர் கர்னல் பன் ஜன்னும் தலைமை தாங்கினர். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உறவில் விரிசல்:

அணுசக்தி விநியோகக் கூட்டமைப்பில் உறுப்பினராகச் சேர்வது, மசூத் அஸாரை சர்வதேச பயங்கரவாதியாக ஐ.நா., அறிவிப்பது உள்ளிட்ட விவகாரங்களில், இரு நாடுகளுக்கும் இடையேயான உறவில் விரிசல்கள் ஏற்பட்டுள்ள நிலையில், இக்கூட்டு ராணுவ பயிற்சி நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

வரசித்தி விநாயகருக்கு வெள்ளி கவசம் - ரூ.10 லட்சம் நோட்டுகளால் அலங்காரம்

விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் அருள்மிகு வரசித்தி விநாயகர் ஆலயத்தில் விநாயக பெருமானுக்கு வெ...

பர்மிட் தாமதம், கட்டண குழப்பம்: அமைச்சர் மீது ஆம்னி உரிமையாளர்கள் சாடல்

ஆம்னி பேருந்து அதிக கட்டண வசூல் குற்றச்சாட்டு தொடர்பாக அமைச்சர் இன்றுவரை பேச்சுவார்த்தை நடத்தவில்லை என உரிமையாளர் சங்கம்...

கோவையில் சிறுமி பாலியல் வன்கொடுமை: ஆய்வாளரை தாக்கிய கைதான நபரை சுட்டுப் பிடித்த போலீசார்

செப். 12-ஆம் தேதி கோவையில் சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், அதில் ஒருவ...

கோவையில் கதவை பூட்டாமல் தூங்கிய மாணவர்கள்: 4 லேப்டாப், 3 செல்போன்கள் திருட்டு

கோவை குனியமுத்தூர் சுகுணாபுரம் வாடகை வீட்டில் தங்கியிருந்த கல்லூரி மாணவர்கள் கதவை பூட்டாமல் தூங்கியதை பயன்படுத்தி நள்ளிர...

கோவையில் சட்டவிரோத மது விற்பனை: 119 மதுபாட்டில்கள் பறிமுதல், 4 பேர் கைது

கோவை மாநகரில் அரசு அனுமதியின்றி கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்த பெண் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். மதுவிலக்கு அமல...

கோவையில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 4085 வழக்குகளுக்கு தீர்வு

கோவை மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 27 அமர்வுகளில் 4085 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் காலை இழந...