கோவையில் அஞ்சல் ஊழியர்கள் தர்ணா போராட்டம்

ஜி.டி.எஸ் ஊழியருக்கான போனஸ் தொகையை ரூ.7000 ஆக உயர்திக் கொடுக்க வேண்டுமெனவும், மேலும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அணைத்து அஞ்சல் மற்றும் நிர்வாகப்பிரிவு ஊழியர் சங்கங்கள் இணைந்து மாபெரும் மண்டல தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.



ஆர்.எஸ் புரம், தலைமை தபால் நிலையம் முன்னால் ஜி.டி.எஸ் ஊழியருக்கான போனஸ் தொகையை ரூ.7000 ஆக உயர்த்த கோரி இரண்டாம் கட்ட போராட்டமான தர்ணா போராட்டம் இன்று நடைபெற்றது. இப்போராட்டம், கோவை தபால்காரர் மண்டல செயலர் ஸ்ரீதர் மற்றும் கோவை நிர்வாக மண்டல செயலர் பாஸ்கரன் தலைமையில் நடைபெற்றது. இதனை ஆர்.எம்.எஸ் மண்டல தலைவர் துவக்கி வைத்தார்.

போராட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டது. அதில்,

1.ஜி.டி.எஸ் ஊழியருக்கான ரூ.7000 போனஸ் வழங்க வேண்டும்.

2.01.10.2006, 01.01.2016 முதல் 6வது, 7வது ஊதியக்குழு பரிந்துரை அடிப்படையில் ஊழியர்களுக்கு புதிய ஊதியம் மற்றும் நிலுவை தொகையை வழங்க வேண்டும்.

3.ஜி.டி.எஸ் ஊழியர்களுக்கு தபால்காரர், எம்.டி.எஸ் விடுப்பு காலங்களில் பணியாற்றுவதற்கான புதிய ஊதியம் மற்றும் நிலுவை தொகை 01.012016 முதல் வழங்க வேண்டும்.

என்ற கோரிக்கைகள் வைத்தனர். 



இந்த தர்ணா போராட்டத்தில் திருப்பூர் மண்டல செயலர் ராஜேந்திரன், ஆர்.எம்.எஸ் மண்டல செயலர் சுந்தரவடிவேல், ஓய்வூதிய சங்க மண்டல செயலர் கருணாநிதி, ஜி.டி.எஸ் மண்டல தலைவர் மரிய அந்தோணி மற்றும் அனைத்து அஞ்சல் ஆ.எம்.எஸ், எம்.எம்.எஸ், பி.எஸ்.டி, ஜி.டி.எஸ் மற்றும் நிர்வாகப்பிரிவு ஊழியர்கள் சங்கங்கள் கலந்து கொண்டது. ஸ்ரீதரன் மற்றும் எபினேசர் காந்தி ஆகியோர் நிகழ்ச்சியினை ஒருங்கிணைத்தனர்.

Newsletter

கோவையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் அறிவிப்பு

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் நண்பகல் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்...

புலியகுளம் முந்தி விநாயகர் கோவிலில் 50 கிலோ சந்தனத்தில் விநாயகருக்கு ராஜ அலங்காரம்

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவை புலியகுளம் முந்தி விநாயகர் கோவிலில் 50 கிலோ சந்தனம் மற்றும் இரண்டு டன் மலர்களால் ரா...

வரசித்தி விநாயகருக்கு வெள்ளி கவசம் - ரூ.10 லட்சம் நோட்டுகளால் அலங்காரம்

விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் அருள்மிகு வரசித்தி விநாயகர் ஆலயத்தில் விநாயக பெருமானுக்கு வெ...

பர்மிட் தாமதம், கட்டண குழப்பம்: அமைச்சர் மீது ஆம்னி உரிமையாளர்கள் சாடல்

ஆம்னி பேருந்து அதிக கட்டண வசூல் குற்றச்சாட்டு தொடர்பாக அமைச்சர் இன்றுவரை பேச்சுவார்த்தை நடத்தவில்லை என உரிமையாளர் சங்கம்...

கோவையில் சிறுமி பாலியல் வன்கொடுமை: ஆய்வாளரை தாக்கிய கைதான நபரை சுட்டுப் பிடித்த போலீசார்

செப். 12-ஆம் தேதி கோவையில் சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், அதில் ஒருவ...

கோவையில் கதவை பூட்டாமல் தூங்கிய மாணவர்கள்: 4 லேப்டாப், 3 செல்போன்கள் திருட்டு

கோவை குனியமுத்தூர் சுகுணாபுரம் வாடகை வீட்டில் தங்கியிருந்த கல்லூரி மாணவர்கள் கதவை பூட்டாமல் தூங்கியதை பயன்படுத்தி நள்ளிர...