பிரேசில் நிறுவனத்திடம் விமானம் வாங்கியதில் முறைகேடு: லண்டன் வாழ் இந்தியர் மீது சி.பி.ஐ. வழக்கு பதிவு


பிரேசில் நிறுவனத்திடம் விமானம் வாங்கியதில் முறைகேடு: லண்டன் வாழ் இந்தியர் மீது சி.பி.ஐ. வழக்கு பதிவு

விமானம் வாங்குவதற்கு ஒப்பந்தம்


இந்திய ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம், பிரேசில் நாட்டின் பிரபல விமான கம்பெனியான எம்பிராயரிடம் இருந்து 2008–ம் ஆண்டு 3 நவீன விமானங்களை வாங்கி அதில் அதிநவீன ரேடார் சாதனங்களை பொருத்தி ராணுவத்துக்கு பயன்படுத்த முடிவு செய்தது.

இதற்காக எம்பிராயர் நிறுவனத்துடன் அப்போதைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு 208 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு (ரூ.1360 கோடி) ஒப்பந்தமும் செய்து கொண்டது. இந்த விமானங்களை பிரேசில் நிறுவனம் இந்தியாவிடம் 2011–ம் ஆண்டு முதல் படிப்படியாக 2013–ம் ஆண்டு இறுதிக்குள் ஒப்படைத்துவிட்டது.




ரூ.360 கோடி கமிஷன

இந்த விமானங்களை வாங்குவதற்கான ஒப்பந்தம் லண்டனில் வசிக்கும் இந்தியரான விபின் கன்னா (வயது 87) என்ற இடைத்தரகர் மூலம் மேற்கொள்ளப்பட்டதாகவும், இதற்காக அவருக்கு ரூ.360 கோடி கமிஷன் கொடுக்கப்பட்டதாகவும் சில மாதங்களுக்கு முன்பு அமெரிக்கா நடத்திய நீதி விசாரணையில் தெரிய வந்தது. இதுபற்றி பிரேசில் ஊடகங்களில் செய்தி வெளியானது.
சிங்கப்பூரில் உள்ள விபின் கன்னாவுக்கு சொந்தமான நிறுவனத்தின் மூலம் இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதாகவும், இதற்காக அவருக்கு 2009–ல் ஆஸ்திரியா, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகள் வழியாக பணம் வழங்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.

சி.பி.ஐ. வழக்கு பதிவ


சி.பி.ஐ. கடந்த மாதம் இதுபற்றி பூர்வாங்க விசாரணை நடத்தியது. அதில் இடைத்தரகருக்கு கமிஷன் கொடுத்திருப்பதற்கான முகாந்திரம் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, லண்டனில் வசிக்கும் ஆயுத ஒப்பந்த இடைத்தரகரான விபின் கன்னா மீது சி.பி.ஐ. நேற்று வழக்கு பதிவு செய்தது.
இதுபற்றி சி.பி.ஐ. அதிகாரிகள் கூறும்போது, ‘‘இங்கிலாந்தில் வசிக்கும் இடைத்தரகர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. இவருடைய பெயர் நாங்கள் விசாரித்து வரும் இன்னொரு ஆயுத ஒப்பந்தத்திலும் இடம்பெற்று உள்ளது’’ என்றனர்.

Newsletter

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...