பிரேசில் நிறுவனத்திடம் விமானம் வாங்கியதில் முறைகேடு: லண்டன் வாழ் இந்தியர் மீது சி.பி.ஐ. வழக்கு பதிவு


பிரேசில் நிறுவனத்திடம் விமானம் வாங்கியதில் முறைகேடு: லண்டன் வாழ் இந்தியர் மீது சி.பி.ஐ. வழக்கு பதிவு

விமானம் வாங்குவதற்கு ஒப்பந்தம்


இந்திய ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம், பிரேசில் நாட்டின் பிரபல விமான கம்பெனியான எம்பிராயரிடம் இருந்து 2008–ம் ஆண்டு 3 நவீன விமானங்களை வாங்கி அதில் அதிநவீன ரேடார் சாதனங்களை பொருத்தி ராணுவத்துக்கு பயன்படுத்த முடிவு செய்தது.

இதற்காக எம்பிராயர் நிறுவனத்துடன் அப்போதைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு 208 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு (ரூ.1360 கோடி) ஒப்பந்தமும் செய்து கொண்டது. இந்த விமானங்களை பிரேசில் நிறுவனம் இந்தியாவிடம் 2011–ம் ஆண்டு முதல் படிப்படியாக 2013–ம் ஆண்டு இறுதிக்குள் ஒப்படைத்துவிட்டது.




ரூ.360 கோடி கமிஷன

இந்த விமானங்களை வாங்குவதற்கான ஒப்பந்தம் லண்டனில் வசிக்கும் இந்தியரான விபின் கன்னா (வயது 87) என்ற இடைத்தரகர் மூலம் மேற்கொள்ளப்பட்டதாகவும், இதற்காக அவருக்கு ரூ.360 கோடி கமிஷன் கொடுக்கப்பட்டதாகவும் சில மாதங்களுக்கு முன்பு அமெரிக்கா நடத்திய நீதி விசாரணையில் தெரிய வந்தது. இதுபற்றி பிரேசில் ஊடகங்களில் செய்தி வெளியானது.
சிங்கப்பூரில் உள்ள விபின் கன்னாவுக்கு சொந்தமான நிறுவனத்தின் மூலம் இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதாகவும், இதற்காக அவருக்கு 2009–ல் ஆஸ்திரியா, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகள் வழியாக பணம் வழங்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.

சி.பி.ஐ. வழக்கு பதிவ


சி.பி.ஐ. கடந்த மாதம் இதுபற்றி பூர்வாங்க விசாரணை நடத்தியது. அதில் இடைத்தரகருக்கு கமிஷன் கொடுத்திருப்பதற்கான முகாந்திரம் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, லண்டனில் வசிக்கும் ஆயுத ஒப்பந்த இடைத்தரகரான விபின் கன்னா மீது சி.பி.ஐ. நேற்று வழக்கு பதிவு செய்தது.
இதுபற்றி சி.பி.ஐ. அதிகாரிகள் கூறும்போது, ‘‘இங்கிலாந்தில் வசிக்கும் இடைத்தரகர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. இவருடைய பெயர் நாங்கள் விசாரித்து வரும் இன்னொரு ஆயுத ஒப்பந்தத்திலும் இடம்பெற்று உள்ளது’’ என்றனர்.

Newsletter

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...