ஒடிசா மருத்துவமனை தீ விபத்து எதிரொலி : சுகாதாரத்துறை அமைச்சர் நாயக் ராஜினாமா

ஒடிசாவில் பிரபல தனியார் மருத்துவமனையில் 25 பேர் உடல் கருகி பலியானதை அடுத்து அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் நாயக் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். புவனேஷ்வரில் உள்ள மருத்துவமனையில் கடந்த திங்கட்கிழமை நேரிட்ட தீ விபத்தில் நோயாளிகள் உட்பட 25 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதையடுத்து அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் நாயக்கை கண்டித்து விமர்சனங்கள் எழுந்த நிலையில் பதவியை அவர் ராஜினாமா செய்துள்ளார்.

இது தொடர்பான கடிதத்தை முதலமைச்சர் நவீன்பட் நாயக்கிற்கு நாயக் அனுப்பியதாகவும், அவரது ராஜினாமா ஏற்றுக்கொள்ள பட்டதாகவும், தெரிவிக்கப்பட்டுள்ளது. நாயக் தார்மீக அடிப்படையில் பதவி விலகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டாலும் தீ விபத்து நிகழ்ந்த மருத்துவமனைக்கு தகுதியை மீறி அவரது மனைவி மூலம் நாயக் சலுகைகளை வழங்கியதே விபத்துக்கு காரணம் என எதிர்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளனர். மருத்துவமனை நிர்வாகம் நடத்தும் கல்வி நிறுவனம் ஒன்றில் நாயக்கின் மனைவி பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...