தித்திக்கும் தீபாவளியை திகட்டாமல் கொண்டாடலாம்..!


தீபாவளி என்றாலே நினைவுக்கு வருவது பட்டாசுகளும், பட்டாடைகளும், பலகாரங்களும், கொண்டாட்டங்களும் தான். அந்தவகையில் தான் இந்த தீபாவளியை அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம். தீபாவளிக்கு முன்னதாக 2 நாட்களும், பண்டிகை முடிந்த பின் 2 நாட்களும் கொண்டாடிய காலங்கள் கழிந்து, தற்போது ஒரே நாளில் தீபாவளியை கொண்டாடி வருகிறோம். ஒரு நாள் தான் பண்டிகை என்ற போதிலும் கொண்டாட்டங்களுக்கு குறைவில்லாத நகராக நமது கோவை மாநகரம் உள்ளது. மற்ற நகரங்கள் போல அல்லாமல் கோவையில் தங்கி வேலை செய்யும் மக்கள் இங்குள்ளவர்களின் அரவணைப்பாலும், பண்பான பேச்சாலும் கோவையிலேயே தங்கி தீபாவளியை கொண்டாடி வருவது தனிச்சிறப்பு.





தற்போது பொதுமக்கள் அனைவரும் வர்த்தக இடங்களில் கூடி புத்தாடைகள் வாங்கி வருகின்றனர். உக்கடம், டவுன்ஹால், காந்திபுரம், ஆர்.எஸ்.புரம், சிங்காநல்லூர் போன்ற கோவையின் முக்கிய பகுதிகள் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிகின்றன. குறிப்பாக, டவுன்ஹால் பகுதியில் வழக்கத்துக்கு அதிகமாக கூட்டநெரிசல் ஏற்பட்டுள்ளது.



இதனால் ஏற்படும் அசம்பாவிதங்களை தடுக்க அப்பகுதியில் அதிக அளவில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். பொருட்கள் வாங்க வரும் மக்கள் தங்களுடன் குழந்தைகளையும் அழைத்து வருகின்றனர். சாலைகளில் விளையாடிக் கொண்டே வரும் சிறுவர், சிறுமியர் பெற்றோரை விட்டு பிரிந்து செல்லும் நிலை ஏற்படலாம். இந்த நிலை ஏற்பட்டால் காவல் துறைக்கு 9444991919 இந்த எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்க வேண்டும். அல்லது அந்தந்த பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள காவல்துறை கோபுரங்களுக்கு சென்று புகார் அளிக்க வேண்டும் என்றும் காவல் துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.





திகட்டாத தீபாவளி:

தீபாவளி பண்டிகையின் போது வெளிப்படும் மகிழ்ச்சி சற்றும் குறைவில்லாமல் இருக்க கோவை மாவட்ட தீயணைப்புத் துறையினர் சார்பில் பல்வேறு பாதுகாப்பு வழிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அவை பின்னவருமாறு:-

  • பெரியவர்களின் மேற்பார்வையிலேயே குழந்தைகள் பட்டாசுகளை வெடிக்க வேண்டும்.
  • பட்டாசுகளை கொளுத்தும் போது இறுக்கமான பருத்தி ஆடைகளை அணியலாம்.
  • ராக்கெட் போன்ற பட்டாசுகளை குடிசைகள் இல்லாத, திறந்த வெளிப்பகுதிகளில் வெடித்து மகிழலாம்.
  • சட்டைப்பைகளில் பட்டாசுகளை வைத்திருக்க வேண்டாம். 
  • நீளமான வர்த்திகளைக் கொண்டு பட்டாசுகளை கொளுத்தலாம். 
  • தீப்புண் ஏற்பட்டால், பேனா மை, மற்றும் இதர பொருட்களை உபயோகிக்காமல் மருத்துவரை அணுகலாம். 
  • இரவு 10 மணிக்குமேல் பட்டாசுகள் வெடிக்கக் கூடாது. 
  • வெடிக்காத பட்டாசுகளை கையில் எடுக்க வேண்டாம். 
  • மருத்துவமனை, பெட்ரோல் பங்க், மளிகை கடை, பட்டாசுக்கடை போன்றவைகள் இருக்கும் இடங்களில் பட்டாசுகளை வெடிக்க வேண்டாம்.




இந்த பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி, பாதுகாப்பான முறையில் தீபாவளியை கொண்டாடுவோம். கொண்டாட்டங்கள் ஒருபுறம் இருக்க, குழந்தைகளின் பாதுகாப்பில் பெற்றோர்கள் தனிக்கவனம் செலுத்தவேண்டிய தருணம் இது.

அனைவருக்கும் தித்திக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

Newsletter

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...

கட்டாஞ்சிமலை: குட்டையில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் குட்டையில் காருடன் மூழ்கி 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து ப...

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...

கோவையில் இன்று மாலை காவல்துறை கொடி அணிவகுப்பு - போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, கோவை மாநகர காவல்துறை இன்று (02.05.2026) மாலை 4.00 மணி முதல் 5.30 ம...

SRIT-ன் கண்டுபிடிப்பு நடைமுறை தேசிய அளவிலான காபி டேபிள் புத்தகத்தில் இடம்பெற்றது

கோயம்புத்தூரில் உள்ள Sri Ramakrishna Institute of Technology-ன் கல்வி கண்டுபிடிப்பு நடைமுறை "The Higher Education Playbo...

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...