திருச்சி பாரதிதாசன் பல்கலை. விழாவில் 40 மாணவ, மாணவியர் மயக்கம்

திருச்சி: திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த விழாவில் 40க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் திடீரென மயங்கி விழுந்தனர்.

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நேற்று மாலை பாவேந்தர் பாரதிதாசன் மணிமண்டப திறப்பு விழா நடைபெற்றது. திரைப்பட இயக்குனர் பாரதிராஜா திறந்து வைத்தார். இதையொட்டி காலை 9 மணி முதல் மாலை 6.30 மணி வரை நடனப்போட்டிகள் புதிய ஆடிட்டோரியத்தில் நடந்தது. 

இதில் 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்று நடனமாடினர். 

இந்த ஆடிட்டோரியத்தில் போதிய காற்றோட்ட வசதி இல்லாததால் போட்டியில் நடனமாடிய மாணவ, மாணவிகள் 40க்கும் மேற்பட்டோர் அடுத்தடுத்து மயக்கமடைந்து விழுந்தனர்.

இதனால் பரபரப்பு ஏற்பட்டது. ஆடிட்டோரியம் அருகே குடிநீர் வசதி இல்லை. மேலும், முதலுதவி வசதி எதுவும் இல்லை. இதையடுத்து முதலுதவி அளிக்கப்பட்டு மயக்கமடைந்த மாணவிகள் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

அரங்கில் காற்றோட்ட வசதி இல்லாததால் பார்வையாளர்களும் மூச்சுத் திணறினர்.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...