அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் பயங்கர சாலை விபத்து : 13 பேர் பலி

அமெரிக்காவில் நெடுஞ்சாலை ஒன்றில் ஏற்பட்ட சாலை விபத்தில் 13 பேர் உயிரிழந்தனர். 31 பேர் படுகாயமடைந்தனர். கலிபோர்னியா மாகாணத்தில் லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் உள்ள ஹாட் ஸ்பிரிங்ஸ் என்ற இடத்திலே இந்த கோர விபத்து நிகழ்ந்துள்ளது. 50-க்கும் மேற்பட்டவர்களுடன் சென்று கொண்டிருந்த சுற்றுலாப் பேருந்து ஒன்று திடீரென கட்டுப்பாட்டை இழந்து, நெடுஞ்சாலையின் ஓரம் நின்று கொண்டிருந்த பெரிய டிராக்டர் ஒன்றின் மீது மோதியது.

இதில் ஓட்டுனர் உட்பட பேருந்தில் பயணித்த 13 பேர் உயிரிழந்தனர். படுகாயமடைந்த 31 பேர் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து பேசிய மருத்துவர் ரிகார்ட், படுகாயமடைந்தவர்களில் சிலருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை உள்ளதாக குறிப்பிட்டார். மேலும் அவர்களுக்கு பல கட்டங்களாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். விபத்து குறித்து கலிபோர்னியா போக்குவரத்து துறை வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது. ஓட்டுனரின் கவனக்குறைவே விபத்திற்கு காரணம் என கூறப்படுகிறது.

Newsletter

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...