ஆட்சியர் தலைமையில் ஆதிதிராவிடர் நலக்குழுக் கூட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செவ்வாயன்று (இன்று) ஆதிதிராவிடர் நலக்குழுக் கூட்டம் நடைபெற்றது. தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணையத்தின் முதுநிலை கண்காணிப்பாளர் லிஸ்டர் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் பேசியதாவது:-

''கோவை மாநகராட்சியின் சார்பில் ஒப்பந்த தொழிலாளர்களின் ஊதியத்தினை அவர்களது வங்கிக் கணக்கு மூலம் பெற வசதி செய்யப்பட்டுள்ளது. ஒப்பந்த தொழிலாளர்களுக்கு வருங்கால வைப்பு நிதி, மருத்துவ நிதி உள்ளிட்ட காப்பீடு வசதிகள் செய்யப்பட்டுள்ளது. மேலும், தூய்மை தொழிலாளர்களுக்கு மருத்துவ வசதி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்காக மருத்துவ முகாம்களும் அதிகளவில் நடத்தப்பட்டு வருகின்றன.

மேலும், பணிகளில் தொழிலாளர்களை பயன்படுத்துவோர், தொழிலாளர் நலனுக்கு எதிராக சிறுவர்களை பணியமர்த்தவோ, கொத்தடிமைகளாக வைத்திருப்பதோ சட்டப்படி குற்றமாகும். அவ்வாறு செயல்படுபவர்களின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்'' என மாவட்ட ஆட்சியர் பேசினார்.



இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் கிருஷ்துராஜ், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் மோகன், ஆதிதிராவிடர் நலக் குழு உறுப்பினர் செல்வக்குமார் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

Newsletter

கோவையில் கற்பகம் பார்மசி கல்லூரியில் 325 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

கோவை ஒத்தக்கால் மண்டபத்தில் கற்பகம் பார்மசி கல்லூரியின் பட்டமளிப்பு விழா-2026 மே 2 ஆம் தேதி நடைபெற்றது. 242 பி.பார்ம், 6...

காதல் விவகாரத்தில் தற்கொலை குறுஞ்செய்தி அனுப்பிய கோவை கல்லூரி மாணவி மாயம்

கோவையில் தனியார் மருத்துவமனையில் பயிற்சி பெற்று வந்த கேரளாவைச் சேர்ந்த 23 வயதான கல்லூரி மாணவி மாயமான சம்பவம் பரபரப்பை ஏற...

கோவையில் 16 மையங்களில் இன்று நீட் தேர்வு: 7,181 பேர் பங்கேற்பு

கோவை மாவட்டத்தில் இன்று நடைபெறும் நீட் (NEET) நுழைவுத் தேர்வில், 16 மையங்களில் 298 அரசு பள்ளி மாணவர்கள் உட்பட மொத்தம் 7,...

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...

கட்டாஞ்சிமலை: குட்டையில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் குட்டையில் காருடன் மூழ்கி 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து ப...

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...