விவசாய நிலத்தில் குவிந்துகிடந்த உயிரினங்கள்- விசாரணை



கோவை மாவட்டம், துடியலூர் வட்டத்திற்கு உட்பட்டது பன்னிமடை பஞ்சாயத்து. இப்பகுதியில் ராஜகோபால் என்பவருக்கு சொந்தமாக விவசாய நிலம் உள்ளது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக அந்த விவசாய நிலத்தில் துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதியினர் கூறிவந்துள்ளனர். இந்நிலையில், செவ்வாயன்று கடுமையான துர்நாற்றம் வீசியுள்ளது.

அப்போது விவசாய நிலத்தில் சோதனையிட்டபோது, அங்கிருந்த ஒரு குழியில் பாம்பு மற்றும் மயில்கள் இறந்துகிடப்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து, வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து வனத்துறையினர் சம்பவ இடத்தில் சோதனையிட்டனர்.

இதில், அந்தக் குழியில் 2 பாம்புகள், 2 காடைகள், 1 காகம், 10 மயில்கள் இறந்துகிடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இவை இறந்து நீண்ட நாட்கள் ஆனதால் சேதமடைத்து துர்நாற்றம் வீசியுள்ளது.

இதனிடையே, ஒரே குழியில் 10 மயில் உட்பட பல உயிரினங்கள் மர்மமான முறையில் இறந்து கிடந்ததால் விவசாய நில உரிமையாளர் ராஜகோபாலிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Newsletter

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...