500, 1000 ரூபாய் கள்ளநோட்டுகள் தாராளமாக புழங்குவதால் எச்சரிக்கை தேவை: ரிசர்வ் வங்கி அறிவுரை

500, 1000 ரூபாய் கள்ளநோட்டுகள் தாராளமாக புழங்குவதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு ரிசர்வ் வங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பண்டிகை காலங்களில் கள்ளநோட்டு புழக்கம் அதிகம் என்பதால் 500, 1000 போன்ற நோட்டுகளை கையாளும் போது கவனத்துடன் இருக்குமாறு மக்கள் கேட்டுகொள்ளப்பட்டுள்ளனர். மக்களின் அவசர மனப்பான்மையை பயன்படுத்தி சமூக விரோத சக்திகள் கள்ளநோட்டுகளை அதிக அளவில் புழக்கத்தில் விட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி உயரதிகாரிகள் மும்பையில் தெரிவித்துள்ளனர்.

நல்ல நோட்டுகளில் அதிகபட்ச பாதுகாப்பு அம்சங்கள் உள்ளதால் கள்ளநோட்டுகளை எளிதில் கண்டுகொள்ள முடியும் என்ற அவர்கள் தேவையானால் ரிசர்வ் வங்கியின் இணையதளத்தில் இது குறித்த வழிகாட்டல்களை பெற்றுக்கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளனர். ஒவ்வொரு முறை ரூபாய் நோட்டுகளை கையாளும் போது அவற்றை ஆராய வேண்டும் என அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். இந்திய ரூபாய் நோட்டுகளில் ஏற்கனவே அதிகபட்ச பாதுகாப்பு அம்சங்கள் இருந்தாலும், மேலும் புதிய அம்சங்களை சேர்பது பற்றி ரிசர்வ் வங்கி ஆலோசித்து வருகிறது.

Newsletter

கோவையில் கற்பகம் பார்மசி கல்லூரியில் 325 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

கோவை ஒத்தக்கால் மண்டபத்தில் கற்பகம் பார்மசி கல்லூரியின் பட்டமளிப்பு விழா-2026 மே 2 ஆம் தேதி நடைபெற்றது. 242 பி.பார்ம், 6...

காதல் விவகாரத்தில் தற்கொலை குறுஞ்செய்தி அனுப்பிய கோவை கல்லூரி மாணவி மாயம்

கோவையில் தனியார் மருத்துவமனையில் பயிற்சி பெற்று வந்த கேரளாவைச் சேர்ந்த 23 வயதான கல்லூரி மாணவி மாயமான சம்பவம் பரபரப்பை ஏற...

கோவையில் 16 மையங்களில் இன்று நீட் தேர்வு: 7,181 பேர் பங்கேற்பு

கோவை மாவட்டத்தில் இன்று நடைபெறும் நீட் (NEET) நுழைவுத் தேர்வில், 16 மையங்களில் 298 அரசு பள்ளி மாணவர்கள் உட்பட மொத்தம் 7,...

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...

கட்டாஞ்சிமலை: குட்டையில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் குட்டையில் காருடன் மூழ்கி 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து ப...

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...