பாகிஸ்தான் கப்பல் உடைக்கும் தளத்தில் வெடி விபத்து - 10 பேர் பலி

பாகிஸ்தானின் கராச்சி நகரையொட்டி கடானி என்ற துறைமுகத்தில் காலாவதியான கப்பல்களை உடைக்கும் துறைமுகம் ஒன்று அமைந்துள்ளது. இந்த துறைமுகத்தில் இன்று வழக்கம்போல் பணிகள் நடைபெற்று வந்தது.

பயணத்தில் இருந்து ஓய்வுபெற்ற ஒரு எண்ணை கப்பலின் டேங்கரை கியாஸ் வெல்டிங் இயந்திரத்தால் வெட்டி எடுக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தபோது கப்பலின் ஒருபகுதி திடீரென்று வெடித்து சிதறியது. இதைதொடர்ந்து, அடுத்தடுத்தும் வெடிச் சத்தம் கேட்டது.

இந்த விபத்தில் சிக்கி பத்து தொழிலாளர்கள் உயிரிழந்ததாகவும், ஐம்பதுக்கும் அதிகமானவர்கள் படுகாயங்களுடன் கராச்சியில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் இவ்விபத்தில் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு பாகிஸ்தான் அதிபர் மம்னூன் உசேன், பிரதமர் நவாஸ் ஷெரிப் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். இவ்விபத்து தொடர்பாக விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள பிரதமர் நவாஸ் ஷெரிப், காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு உயர்தர சிகிச்சை அளிக்குமாறும் டாக்டர்களை அறிவுறுத்தியுள்ளார்.

Newsletter

கோவையில் கற்பகம் பார்மசி கல்லூரியில் 325 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

கோவை ஒத்தக்கால் மண்டபத்தில் கற்பகம் பார்மசி கல்லூரியின் பட்டமளிப்பு விழா-2026 மே 2 ஆம் தேதி நடைபெற்றது. 242 பி.பார்ம், 6...

காதல் விவகாரத்தில் தற்கொலை குறுஞ்செய்தி அனுப்பிய கோவை கல்லூரி மாணவி மாயம்

கோவையில் தனியார் மருத்துவமனையில் பயிற்சி பெற்று வந்த கேரளாவைச் சேர்ந்த 23 வயதான கல்லூரி மாணவி மாயமான சம்பவம் பரபரப்பை ஏற...

கோவையில் 16 மையங்களில் இன்று நீட் தேர்வு: 7,181 பேர் பங்கேற்பு

கோவை மாவட்டத்தில் இன்று நடைபெறும் நீட் (NEET) நுழைவுத் தேர்வில், 16 மையங்களில் 298 அரசு பள்ளி மாணவர்கள் உட்பட மொத்தம் 7,...

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...

கட்டாஞ்சிமலை: குட்டையில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் குட்டையில் காருடன் மூழ்கி 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து ப...

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...