காஷ்மீர் பள்ளிகளை மூடச் சொல்லி மிரட்டும் பாக்., படைகள்

ஜம்மு: காஷ்மீரின் எல்லையோரப் பகுதியில் உள்ள பள்ளிகளை மூடுமாறு பாக்., படைகள் தொடர்ந்து மிரட்டல் விடுத்து வருகின்றன.

பள்ளிகள் மூடல்:

எல்லையில் பாக்., படைகள் உடனான பயங்கர துப்பாக்கிச் சண்டை காரணமாக காஷ்மீரின் எல்லையோரத்தில் இருக்கும் 200 க்கும் மேற்பட்ட பள்ளிகள் காலவரையின்றி மூடப்பட்டுள்ளன. ஜம்முவில் உள்ள 174 பள்ளிகள் மற்றும் சம்பா மாவட்டத்தில் உள்ள 45 பள்ளிகளையும் மறுஉத்தரவு வரும் வரை திறக்கக் கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவு தனியார் பள்ளிகளுக்கும் பொருந்தும் என மாவட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

தொடர் மிரட்டல்:

இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், காஷ்மீரில் நிலவிய பதற்ற நிலை காரணமாக அனைத்து கல்விநிறுவனங்களையும் மூட வேண்டும் என பிரிவினைவாதிகள் உத்தரவிட்டனர். இதன் காரணமாக கடந்த 4 மாதங்களாக கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. பள்ளிகளை மூடுமாறு மிரட்டல் விடுத்த விவகாரம் தொடர்பாக இதுவரை 12 பேரை கைது செய்துள்ளோம். மேலும் 23 பேரை தேடி வருகிறோம். இந்நிலையில் தற்போது துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டு வரும் பாக்., படைகளும் மிரட்டல் விடுத்து வருகின்றன என தெரிவித்துள்ளார்.

மூடியே இருக்கட்டும்:

எல்லையில் உள்ள பள்ளிகளை மீண்டும் திறக்க அக்டோபர் 3ம் தேதி மாநில அரசு உத்தரவிட்டது. இந்நிலையில் சர்ஜிக்கல் ஸ்டிரைக்கிற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தொடர்ந்து பாக்., படைகள் எல்லையில் தாக்குதல் நடத்தி வருவதால் குழந்தைகளின் பாதுகாப்பு கருதி, மறுஉத்தரவு வரும் வரை சர்வதேச எல்லை மற்றும் ஜம்முவில் உள்ள எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் உள்ள பள்ளிகளை மூட நவம்பர் 1 ம் தேதி முதல் உத்தரவிட்டுள்ளதாக ஜம்மு துணை கமிஷனர் சிம்ரன் தீப் சிங் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவையில் கற்பகம் பார்மசி கல்லூரியில் 325 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

கோவை ஒத்தக்கால் மண்டபத்தில் கற்பகம் பார்மசி கல்லூரியின் பட்டமளிப்பு விழா-2026 மே 2 ஆம் தேதி நடைபெற்றது. 242 பி.பார்ம், 6...

காதல் விவகாரத்தில் தற்கொலை குறுஞ்செய்தி அனுப்பிய கோவை கல்லூரி மாணவி மாயம்

கோவையில் தனியார் மருத்துவமனையில் பயிற்சி பெற்று வந்த கேரளாவைச் சேர்ந்த 23 வயதான கல்லூரி மாணவி மாயமான சம்பவம் பரபரப்பை ஏற...

கோவையில் 16 மையங்களில் இன்று நீட் தேர்வு: 7,181 பேர் பங்கேற்பு

கோவை மாவட்டத்தில் இன்று நடைபெறும் நீட் (NEET) நுழைவுத் தேர்வில், 16 மையங்களில் 298 அரசு பள்ளி மாணவர்கள் உட்பட மொத்தம் 7,...

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...

கட்டாஞ்சிமலை: குட்டையில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் குட்டையில் காருடன் மூழ்கி 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து ப...

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...