பெண்களை பன்றிகள் என்பவர் நமக்கு அதிபராக வேண்டாம்: டிரம்ப் மீது ஒபாமா பாய்ச்சல்

வாஷிங்டன்: நமக்கு நல்ல அதிபர் வர வேண்டும். பெண்களை பன்றிகள் என்று சொல்பவர் அல்ல என அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா டிரம்ப் பற்றி தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் களத்தில் உள்ள டொனால்ட் டிரம்ப் மீது ஏகப்பட்ட பாலியல் புகார்கள் எழுந்துள்ளன. இந்நிலையில் டெம்பியில் நடந்த பேரணியில் கலந்து கொண்ட ஜனநாயக கட்சி அதிபர் வேட்பாளரான ஹில்லாரி கிளிண்டன் கூறுகையில், டிரம்ப் அதிபராகிவிட்டார் என்று கற்பனை செய்யுங்கள். அவர் அதிபராகி உங்கள் வாழ்க்கையை பாதிக்கும் முடிவுகளை எடுக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அவர் ட்விட்டர் போருக்கு பதிலாக உண்மையான போரையே துவங்குவார் என்றார்.

டிரம்ப் பெண்களை அவமதிப்பவர் என்று தொடர்ந்து கூறி வருகிறார் ஹில்லாரி. இந்நிலையில் வடக்கு கரோலினாவில் உள்ள ராலேவில் நடந்த பேரணியில் பேசிய ஒபாமா கூறுகையில், குடியரசுக் கட்சி வேட்பாளர் ஏமாற்றுபவர் அதிபர் மாளிகைக்கு வர தகுதியில்லாதவர். அமெரிக்கா மக்களை கொடுமைப்படுத்த வேண்டும் என்று யோசனை சொல்பவர் அதிபர் ஆகக் கூடாது.

பிரபலமாக இருக்கும் காரணத்தால் பாலியல் தொல்லைகள் கொடுத்துவிட்டு தப்பிப்பவரின் குரலை கேட்க விரும்புகிறீர்களா? பெண்களை பன்றிகள், நாய்கள் என்று யார் கூறுவார்கள்? அந்த குரல் அமெரிக்காவில் குரல் அல்ல. அமெரிக்காவுக்காக தனது வாழ்வை அர்ப்பணித்தவர் ஹில்லாரி. அவர் தான் அடுத்த அதிபராக வேண்டும். அவர் தான் சரியான நபர் என்றார்.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...