கட்டிட கழிவுகளை அகற்ற உதவி சேவை மையத்தை '8190000400' மாநகராட்சி ஆணையர் துவக்கி வைத்தார்!


கோவை மாநகராட்சியில் கட்டிட கழிவுகளை அகற்றுவதற்கான உதவி சேவை மையத்தையும், அதற்கு பயன்படுத்தக்கூடிய கட்டிட கழிவுகளை அகற்றும் வாகனங்களையும் மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலரான க.விஜயகார்த்திகேயன் துவக்கி வைத்தார்.

இதுகுறித்து, க.விஜயகார்த்திகேயன் தெரிவிக்கையில், ''தமிழக முதல்வர் 110 விதியின் கீழ் அறிவித்த சிறப்பு திட்டங்களில் ஒன்றான கட்டிட கழிவுகளை மறுசுழற்சி முறையில் பயன்படுத்தும் திட்டம் இதுவாகும். இதனை செயல்படுத்தும் விதமாக கோவை மாநகராட்சியில் கட்டிட கழிவுகளை அகற்றுவதற்கான உதவி சேவை மையம் 8190000400 என்ற தொலைபேசி எண் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும், கட்டிட கழிவுகளை அகற்றும் பணிகளில் 3 வாகனங்கள் துவங்கி வைக்கப்பட்டது.

குறிப்பாக பொதுமக்கள் வீடுகள் கட்டும் பொழுதும், வீடுகள், கட்டிடங்களை இடிக்கும் போதும் கட்டிட கழிவுகள் ஆங்காங்கே கொட்டப்படுகின்றன. இதை தவிர்ப்பதற்காகவே இத்திட்டம் துவங்கப்பட்டுள்ளது. இதுபோன்ற கட்டிடக் கழிவுகள் இருக்கும் பட்சத்தில் பொதுமக்கள் இந்த 8190000400 எண்ணிற்கு தொடர்புகொண்டு பயன்படுத்திக் கொள்ளலாம். இக்கட்டிட கழிவுகளைக் கொண்டு மறுசுழற்சியாக செங்கற்கள், பேவர் பிளாக்ஸ் மற்றும் எம்-சேன்ட் போன்றவற்றை தயார் செய்வதற்காக இத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது'' என்றார்.

இந்நிகழ்ச்சியில் துணை ஆணையர் ப.காந்திமதி மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...