நீலகிரியில் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு ஆட்சியர் திடீர் ஆய்வு


தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை விரையில் துவங்கவுள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் துரித முறையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மழை நீர் வடிகால் அமைப்பு, குளங்கள், நீர்த்தேக்கம் உள்ளிட்டவை கனமழையின் காரணமாக வெள்ளம் பாதிக்காதவாறு துறை அதிகாரிகள் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், வடிகால் துறை, சுகாதாரத்துறை, உணவு பாதுகாப்புத் துறை, கால்நடைத் துறை உள்ளிட்ட பிரிவுகளின் சார்பிலும் வடகிழக்கு பருவமழை அவசரக் காலத்தில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது.



அதன் ஒரு பகுதியாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் பொ.சங்கர், அம்மாவட்டத்திற்கு உட்பட்ட வெள்ளம் பாதிப்புகள் ஏற்படக் கூடிய சில பகுதிகளில் திடீர் ஆய்வில் ஈடுபட்டார். குன்னூர்க்கு உட்பட்ட கிருஷ்ணாபுரம் பகுதியில் ஆய்வில் ஈடுபட்ட ஆட்சியர் அப்பகுதியில் இருந்த ஒரு பெட்டிக் கடை வியாபாரியிடம், அவரது வியாபாரம் குறித்து விசாரித்தார். 

இந்நிகழ்வின் போது, நீலகிரி மாவட்ட ஆட்சியர் பொ.சங்கருடன் குன்னூர் ஆர்.டி.ஓ கீதாபிரியா, தாசில்தார் ஜான் மனோகர், குன்னூர் வருவாய் ஆய்வாளர் வசந்த் மற்றும் பலர் இருந்தனர்.

Newsletter

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...