நீலகிரியில் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு ஆட்சியர் திடீர் ஆய்வு


தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை விரையில் துவங்கவுள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் துரித முறையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மழை நீர் வடிகால் அமைப்பு, குளங்கள், நீர்த்தேக்கம் உள்ளிட்டவை கனமழையின் காரணமாக வெள்ளம் பாதிக்காதவாறு துறை அதிகாரிகள் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், வடிகால் துறை, சுகாதாரத்துறை, உணவு பாதுகாப்புத் துறை, கால்நடைத் துறை உள்ளிட்ட பிரிவுகளின் சார்பிலும் வடகிழக்கு பருவமழை அவசரக் காலத்தில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது.



அதன் ஒரு பகுதியாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் பொ.சங்கர், அம்மாவட்டத்திற்கு உட்பட்ட வெள்ளம் பாதிப்புகள் ஏற்படக் கூடிய சில பகுதிகளில் திடீர் ஆய்வில் ஈடுபட்டார். குன்னூர்க்கு உட்பட்ட கிருஷ்ணாபுரம் பகுதியில் ஆய்வில் ஈடுபட்ட ஆட்சியர் அப்பகுதியில் இருந்த ஒரு பெட்டிக் கடை வியாபாரியிடம், அவரது வியாபாரம் குறித்து விசாரித்தார். 

இந்நிகழ்வின் போது, நீலகிரி மாவட்ட ஆட்சியர் பொ.சங்கருடன் குன்னூர் ஆர்.டி.ஓ கீதாபிரியா, தாசில்தார் ஜான் மனோகர், குன்னூர் வருவாய் ஆய்வாளர் வசந்த் மற்றும் பலர் இருந்தனர்.

Newsletter

காணியாளம்பாளையம் MIRA HOMES பகுதியில் ஈக்கள் தொல்லை: உடனடி நடவடிக்கை கோரி மனு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தாலுகா கக்கடவு ஊராட்சிக்கு உட்பட்ட காணியாளம்பாளையம் MIRA HOMES DTCP அப்ரூவல் வீட்டுமனை பகுதி...

இடையர்பாளையத்தில் காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு கூட்டம்

கோவை மாநகர் மாவட்டம் கவுண்டம்பாளையம் சர்க்கிள் கமிட்டி சார்பாக இந்திய தேசிய காங்கிரஸ் மறு சீரமைப்பு இயக்கத்தின் எஸ் எஸ்...

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...