குரூப்-4 தேர்வு: கோவை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு


கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் சார்பில் நடைபெற்ற குரூப்- 4 தேர்வினை ஞாயிறன்று மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அரசு பணியாளர் தேர்வாணையம் பல்வேறு போட்டித் தேர்வுகளை நடத்தி வருகின்றது. அதன்படி, ஞாயிறன்று (இன்று) தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் குரூப்- 4 தேர்வு நடைபெற்றது. இத்தேர்வு மையங்களில் மாவட்ட ஆட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர் உள்ளிட்டோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். 



இதனைத்தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் தெரிவிக்கையில், 

''குரூப்- 4 தேர்வெழுத கோவை மாவட்டத்தில் மட்டும் 50 ஆயிரத்து 863 பேர் விண்ணப்பித்திருந்தனர். ஞாயிறன்று (இன்று) 123 மையங்களில் நடைபெற்ற அத்தேர்வில் 36 ஆயிரத்து 964 பேர் தேர்வெழுதினர். இத்தேர்வினை கண்கானிக்க 70 மொபைல் யூனிட்களும், 26 பறக்கும் படை குழுவும், 179 அறை கண்கானிப்பாளர்களும் கண்கானிப்பு பணியினை மேற்கொண்டனர். 

இதில், முறைகேடுகள் ஏதும் ஏற்படாத வகையில் தேர்வு நடைபெற்றது. மேலும், அனைத்து மையங்களையும் கண்கானிக்க வீடியோ ஒளிப்பதிவு செய்யப்பட்டது. இத்தேர்வு சிறப்பாக நடைபெற பணியாற்றிய அனைவருக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்'' என ஆட்சியர் தெரிவித்தார்.

Newsletter

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...

கோவை சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95% பணிகள் நிறைவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95% நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம், மின்வி...

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...