வயநாட்டில் குண்டு காயத்துடன் இறந்துகிடந்த காட்டு யானை

நீலகிரி, முதுமலை அடுத்த தமிழக- கேரள எல்லையில் அமைந்துள்ளது வயநாடு. இயற்கை எழில் சூழ்ந்த இப்பகுதியில் யானை, காட்டெருமை, மான், சிறுத்தை என பல்வேறு உயிரினங்கள் வசித்து வருகின்றன.

இந்நிலையில், அப்பகுதியில் காட்டு யானை ஒன்று இறந்துகிடப்பதாக வனத்துறையினருக்கு தகவல் தெரியவந்துள்ளது. இதனைத்தொடர்ந்து அப்பகுதிக்குச் சென்ற வனத்துறையினர் வயநாடுக்குட்பட்ட அதிரட்டுகுனி வயல் பகுதியில் காட்டு யானை ஒன்று இறந்துகிடப்பதை கண்டனர். தொடர்ந்து அதனை சோதனையிட்ட போது அதன் தலையில் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்திருப்பதற்கான தடையம் தென்பட்டது.

இதுகுறித்து, வழக்கு பதிவு செய்து வனத்துறை மற்றும் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

முன்னதாக, கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வயநாடு அருகே வயல் பகுதியில் யானை நுழைந்து சேதப்படுத்தியதற்காக அதனைக்கொன்ற மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் 16 மையங்களில் இன்று நீட் தேர்வு: 7,181 பேர் பங்கேற்பு

கோவை மாவட்டத்தில் இன்று நடைபெறும் நீட் (NEET) நுழைவுத் தேர்வில், 16 மையங்களில் 298 அரசு பள்ளி மாணவர்கள் உட்பட மொத்தம் 7,...

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...

கட்டாஞ்சிமலை: குட்டையில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் குட்டையில் காருடன் மூழ்கி 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து ப...

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...

கோவையில் இன்று மாலை காவல்துறை கொடி அணிவகுப்பு - போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, கோவை மாநகர காவல்துறை இன்று (02.05.2026) மாலை 4.00 மணி முதல் 5.30 ம...

SRIT-ன் கண்டுபிடிப்பு நடைமுறை தேசிய அளவிலான காபி டேபிள் புத்தகத்தில் இடம்பெற்றது

கோயம்புத்தூரில் உள்ள Sri Ramakrishna Institute of Technology-ன் கல்வி கண்டுபிடிப்பு நடைமுறை "The Higher Education Playbo...