45வது அதிபர் டிரம்புக்கு மோடி, தலைவர்கள் வாழ்த்து

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி: புதிய அதிபராக வெற்றி பெற்ற டிரம்ப்புக்கு எனது வாழ்த்துக்கள். உங்கள் தலைமையில் இந்தியா-அமெரிக்கா உறவு புதிய வரலாறு படைக்கும்.

பிரதமர் மோடி: அமெரிக்காவின் 45வது அதிபராக தேர்வு செய்யப்பட்ட டிரம்ப்புக்கு எனது வாழ்த்துக்கள். இந்தியா-அமெரிக்கா உறவை புதிய உயரத்துக்கு கொண்டு செல்ல இணைந்து செயல்படும் நாளை எதிர்பார்த்து காத்திருக்கிறேன். பிரசாரத்தின் போது இந்தியாவை பற்றி உயர்வாக பேசியதற்கு மகிழ்ச்சியை தெரிவித்துக்கொள்கிறேன்.

இப்போதைய அதிபர் ஒபாமா: புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்ட உங்களுக்கு எனது வாழ்த்துக்கள். வெள்ளை மாளிகைக்கு இன்று வரும்படி வரவேற்கிறேன். இதன்படி, டிரம்ப் இன்று வெள்ளை மாளிகைக்கு செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரஷ்ய அதிபர் புதின்: அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்ட டிரம்ப்பிற்கு எனது வாழ்த்துக்கள். மிகவும் சிக்கலான நிலையில் உள்ள அமெரிக்கா-ரஷ்யா உறவு இனிமேல் மேம்படும். ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தை இருநாடுகளுக்கு இடையே நடைபெறும் என்று நான் நம்புகிறேன்.

இங்கிலாந்து பிரதமர் தெரசா மே: கடின பிரசாரத்திற்கு பின் அமெரிக்காவின் அடுத்த அதிபராக தேர்வு செய்யும் டிரம்ப்பிற்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். இருநாடுகளும் ஏற்கனவே இணைந்து செயல்பட்டு வருகின்றன. இனிவரும் காலங்களிலும் இந்த நட்பு தொடரும் என நம்புகிறேன்.

ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல்: ஜனநாயக முறைப்படி ஜெர்மனியும், அமெரிக்காவும் இணைந்து செயல்படும். புதிய அதிபர் டிரம்ப்புடன் இணைந்து செயலாற்றும் நாளை எதிர்பார்த்து காத்து இருக்கிறேன்.

சீன வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் லூகாங்: புதிய அமெரிக்க அதிபர் தலைமையில் இருநாட்டு உறவுகள் மேம்படும் என்று நம்புகிறோம். 

பாகிஸ்தான் பிரதமர் நவாஸ்: நீங்கள் பெற்றுள்ளது சரித்திர வெற்றி. அமெரிக்க மக்கள் விடுதலை, ஜனநாயகம், மனித உரிமை மீது நம்பிக்கை வைத்து உங்களை தேர்வு செய்துள்ளனர்.

கனடா பிரதமர் ஜஸ்டின்: அமெரிக்காவின் புதிய அதிபர் டிரம்ப்புடன் இணை்ந்து செயல்பட காத்து இருக்கிறோம்.

Newsletter

SRIT-ன் கண்டுபிடிப்பு நடைமுறை தேசிய அளவிலான காபி டேபிள் புத்தகத்தில் இடம்பெற்றது

கோயம்புத்தூரில் உள்ள Sri Ramakrishna Institute of Technology-ன் கல்வி கண்டுபிடிப்பு நடைமுறை "The Higher Education Playbo...

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...