ஆசிரியர் திட்டியதால் அரசு பள்ளி மாணவன் தற்கொலை!


சூலூர் அருகே அரசு பள்ளி மாணவன் ஆசிரியர்கள் பள்ளியை விட்டு நீக்கிவிடுவதாக திட்டியதால் சனிக்கிழமை சானிப்பவுடர்குடித்தும் தூக்கிட்டும் தற்கொலை செய்துகொண்டார். தற்கொலை செய்ய தூண்டியதாக பள்ளி தலைமை ஆசிரியர் மீதும் வகுப்பு ஆசிரியர் மீதும் அப்பகுதியினர் சூலூர் போலீஸில் புகார் தெரிவித்தனர்.

சூலூர் செஞ்சேரிமலை அருகேயுள்ள எஸ்.குமாரபாளையத்தில் வசிக்கும் செல்வராஜ்  மகன் எஸ்.சசிக்குமார்(14) செஞ்சேரியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கிறார். சனிக்கிழமை மதியம் தற்கொலை செய்துகொண்டதாக தெரிகிறது.

செஞ்சேரிமலையில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் செல்வராஜின் இரண்டு மகன்களான ஜெயராமன்(16) பதினொன்றாம் வகுப்பும் சசிக்குமார் ஒன்பதாம் வகுப்பும் படித்து வருகின்றனர். இவர்களின் தந்தை கூலி வேலைக்கு சென்றுவருகிறார். இவர்கள் தலித் வகுப்பை சேர்ந்தவர்கள் என தெரிகிறது, கடந்த வாரம் பள்ளியின் தலைமை ஆசிரியர் ராஜேஸ்வரி மற்றும் வகுப்பாசிரியர் ஞானஜோதி ஆகிய இருவரும் வகுப்பறையில் மற்ற மாணவர்களின் நோட்டுகள் கிழிக்கப்பட்டிருப்பது சம்பந்தமாக சசிக்குமாரை கூப்பிட்டு கண்டித்துள்ளனர். அப்போது சசிக்குமார் தான் அச்செயலை செய்யவில்லை எனவும் அச்செயலை செய்த மாணவனையும் அடையாளம் காண்பித்துள்ளார். ஆனால் வகுப்பாசிரியர் ஞானஜோதி சசிக்குமார் மற்றும் அவரது அண்ணன் ஜெயராம் இருவரும் ஒழுங்கீனமானவர்கள் இவர்கள் தான் இச்செயலை செய்திருக்க கூடும் என தலைமை ஆசிரியரிடம் தெரிவித்ததாக தெரிகிறது. இதனால் பள்ளியை  விட்டு நீக்குமாறும் பரிந்துரை செய்ததாக கூறப்படுகின்றது. தலைமை ஆசிரியர் சசிக்குமாரின் பெற்றோரை அழைத்து மாற்றுச்சான்றிதழ் பெற்று செல்லுமாறு கூறியுள்ளார். இதனால் மனமுடைந்த மாணவன் தற்கொலை கொண்டதாக கூறப்படுகிறது . போலீஸ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். .

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...