தெரு கூத்தாடிகளின் குழந்தைகளுடன் குழந்தைகள் தினம் கொண்டாடிய ஈர நெஞ்சம் அறக்கட்டளை!


உலக அளவில் நாளை குழந்தைகள் தினம் கொண்டாடப்பட உள்ளது. ஒவ்வொரு ஆண்டும், மாறுவேடப்போட்டி, இசை மற்றும் நடன நிகழ்ச்சிகளுடன் குழந்தைகளுக்கு பரிசுப்பொருட்களை வழங்கி பள்ளிகளில் குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், கோவையை சேர்ந்த ஈர நெஞ்சம் அறக்கட்டளை சார்பில் தெருவில் சாட்டையால் அடித்தும், சாகசம் நிகழ்த்தியும் சம்பாதிக்கும் தெரு கூத்தாடிகளின் குழந்தைகளுடன் ஆடிப்பாடி இன்று குழந்தைகள் தினம் கொண்டாடினர். 



ஈர நெஞ்ச அறக்கட்டளையை சேர்ந்த தன்னார்வர்கள் அந்த பிள்ளைகளுக்கு புத்தாடைகள், பரிசுப்பொருட்கள், திண்பண்டங்களை கொடுத்து அவர்களுடன் குழந்தைகள் தினத்தை கொண்டாடினர். குழந்தைகளை மகிழ்விக்கும் வகையில் இசை மற்றும் நடன நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன.



இது குறித்து,  சின்ன கண்ணய்யா என்பவர் கூறுகையில், 'எங்கள் போன்றோரை இந்த சமூகத்தில் யாரும் கண்டுகொள்வதில்லை. எங்களுக்கு பண்டிகைகளும், கொண்டாட்டங்களும் கனவாகிப்போனது. தினமும் சாலைகளில் சாட்டைகளால் எங்களை நாங்களே அடித்து கொண்டும், பிளேடு, கத்தி போன்றவற்றால் உடலை கீறிக்கொண்டும் சம்பாதித்து வருகிறோம். எங்களைப் போல் கோவையில் 35 குடும்பங்கள் உள்ளன.



பள்ளி பருவம் முடிக்கும் எங்கள் குழந்தைகள் கல்லூரியில் சேர்க்க சாதி சான்றிதழ் தேவைப்படுகிறது. ஆனால் அரசு எங்களுக்கு சாதி சான்றிதழ் தர மறுத்து, பாட்டன் காலத்து ஆவணங்களை கேட்கின்றனர்.வீடில்லாத எங்களிடம் ஏது ஆவணங்கள்? இந்த வலியும், வேதனையும் எங்களோடு போகட்டும். அடுத்த தலைமுறையினராவது படித்து நல்ல வேலைகளில் சேர வேண்டும். அதற்கு அரசு உடனடியாக சாதி சான்றிதழ் வழங்க வேண்டும்' என்று சின்ன கண்ணய்யா கண்ணீர் மல்க  கூறினார்.

தொடர்ந்து ஈர நெஞ்சம் அறக்கட்டளையின் நிர்வாகி மகேந்திரன் கூறியதாவது :- 

தெருவில் கூத்தாடி பிழைப்பு நடத்துபவர்களுக்கும் குழந்தைகள் உண்டு. அவர்களும் கொண்டாடப்பட வேண்டிய மனித பிறப்புகளே. ஆனால் சமூகத்தில் யாரும் அவர்களை கண்டுகொள்வதில்லை.இதனால் இன்று அவர்களுடன் குழந்தைகள் தினம் கொண்டாட முடிவு செய்தோம். அவர்களுக்கு புத்தாடைகள் மற்றும் விளையாட்டு பொருட்கள் வழங்கி மகிழ்வித்தோம். அரசு அவர்களுக்கு சாதி சான்றிதழ் வழங்காதது, குழந்தைகளின் கல்வியை பாதிப்பதாக கூறுகின்றனர்.சம்மந்தப்பட்ட அதிகாரிகள் இந்த பிரச்சனையில் உடனடியாக தலையிட்டு அவர்கள் வாழ்வில் ஒளியேற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

உள்ளத்தில் எத்தனை சோகம் இருந்தாலும்.....உடலை சாட்டையால் அடித்து பிழைக்கும் இந்த குழந்தைகளை இந்த தினத்தன்று நினைவுகூர்ந்து மகிழ்வித்த ஈர நெஞ்சங்களுக்கு வாழ்த்துக்கள்! ஜாதி சான்றிதழ் இல்லாததால் படிக்க வழியில்லாமல் இருக்கிறோம் என கூறும் அந்த குழந்தைகளின் பெற்றோரின் கோரிக்கைகளை சம்மந்தப்பட்ட அதிகாரிகள் தீர்த்து வைத்தால், அடுத்த ஆண்டு குழந்தைகள் தினம் இவர்களுக்கு ஒரு விடிவெள்ளியாய் அமையும்!  



Newsletter

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...