பாகிஸ்தானில் 100 துருக்கி ஆசிரியர்கள் வெளியேற உத்தரவு

துருக்கியில் கடந்த ஜூலை மாதம் ஆட்சியை கவிழ்க்க திடீர் ராணுவ புரட்சி நடைபெற்றது. இந்த புரட்சியை அதிபர் ரி‌ஷப்தாயிப் முறியடித்தார்.

இந்த புரட்சிக்கு அமெரிக்காவில் வசித்து வரும் மதகுரு பெதுலாகுலான் தான் காரணம் என்று அதிபர் ரி‌ஷப்தாயிப் குற்றம் சாட்டினார். இவரது ஆதரவாளர்கள் நடத்தும் சர்வதேச பள்ளிகள் பல பாகிஸ்தானில் செயல்பட்டு வருகின்றன. இங்கு துருக்கியை சேர்ந்த ஆசிரியர்கள் பணியாற்றி வருகிறார்கள். அவர்கள் துருக்கிக்கு எதிராக செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த நிலையில் துருக்கி அதிபர் ரி‌ஷப்தாயிப் பாகிஸ்தானில் 2 நாள் சுற்றுப்பயணமாக வந்துள்ளார். அவர் பிரதமர் நவாஸ்செரீப்பை சந்தித்து பேசினார். அப்போது பாகிஸ்தானில் செயல்படும் அந்த பள்ளி ஆசிரியர்கள் தொடர்பாக நவாஸ்செரீப்பிடம் பேசியதாக தெரிகிறது.

இதையடுத்து இந்த பள்ளிகளில் பணிபுரியும் 100 துருக்கி ஆசிரியர்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று பாகிஸ்தான் அரசு உடனடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது.

Newsletter

கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

அரசாணைகளின்படி அரசு அலுவலகங்களில் அம்பேத்கர், பெரியார், அண்ணா, காமராஜர் உள்ளிட்ட சகிக்க நீதி தலைவர்களின் படங்களை வைக்க வ...

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...