பாகிஸ்தானில் 100 துருக்கி ஆசிரியர்கள் வெளியேற உத்தரவு

துருக்கியில் கடந்த ஜூலை மாதம் ஆட்சியை கவிழ்க்க திடீர் ராணுவ புரட்சி நடைபெற்றது. இந்த புரட்சியை அதிபர் ரி‌ஷப்தாயிப் முறியடித்தார்.

இந்த புரட்சிக்கு அமெரிக்காவில் வசித்து வரும் மதகுரு பெதுலாகுலான் தான் காரணம் என்று அதிபர் ரி‌ஷப்தாயிப் குற்றம் சாட்டினார். இவரது ஆதரவாளர்கள் நடத்தும் சர்வதேச பள்ளிகள் பல பாகிஸ்தானில் செயல்பட்டு வருகின்றன. இங்கு துருக்கியை சேர்ந்த ஆசிரியர்கள் பணியாற்றி வருகிறார்கள். அவர்கள் துருக்கிக்கு எதிராக செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த நிலையில் துருக்கி அதிபர் ரி‌ஷப்தாயிப் பாகிஸ்தானில் 2 நாள் சுற்றுப்பயணமாக வந்துள்ளார். அவர் பிரதமர் நவாஸ்செரீப்பை சந்தித்து பேசினார். அப்போது பாகிஸ்தானில் செயல்படும் அந்த பள்ளி ஆசிரியர்கள் தொடர்பாக நவாஸ்செரீப்பிடம் பேசியதாக தெரிகிறது.

இதையடுத்து இந்த பள்ளிகளில் பணிபுரியும் 100 துருக்கி ஆசிரியர்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று பாகிஸ்தான் அரசு உடனடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது.

Newsletter

SRIT-ன் கண்டுபிடிப்பு நடைமுறை தேசிய அளவிலான காபி டேபிள் புத்தகத்தில் இடம்பெற்றது

கோயம்புத்தூரில் உள்ள Sri Ramakrishna Institute of Technology-ன் கல்வி கண்டுபிடிப்பு நடைமுறை "The Higher Education Playbo...

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...