மாற்றுத்திறனாளி பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டு போட்டிக்களில் உற்சாகத்துடன் பங்கேற்ற மாணவர்கள்

மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறையின் சார்பில் அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளி பள்ளி மாணவர்களுக்கான முதல் சுற்று விளையாட்டுப் போட்டிகள் கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் வெள்ளியன்று (இன்று) துவங்கியது.



இதில், கோவை மாவட்டத்திற்கு உட்பட்ட 450-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். மாற்றுத்திறனாளி மாணவர்கள், பார்வை குறைபாடு உள்ளவர்கள், மூளை வளர்ச்சி குன்றியவர்கள், காது கேளாதோர் என நான்கு பிரிவுகளாக விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது.

14 வயதுக்கு உட்பட்ட 6 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு 50 மீட்டர் ஓட்டப்பந்தய போட்டி, ஸ்டாண்டிங் பிராட் ஜம்ப், டென்னிஸ் பந்து எறிதலும், 17 வயதுக்கு உட்பட்ட 9 மற்றும் 10-ம் வகுப்பு பயிலும் மாணவர்கள் மற்றும் 11 மற்றும் 12-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு இதே பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டது.

மாற்றுத்திறனாளி மாணவர்கள் தங்கள் திறமைகளை வெளிபடுத்த ஒருவருக்கொருவர் போட்டி போட்டுக் கொண்டு பங்கேற்றது பார்வையாளர்களை பரவசப்படுத்தியது. இப்போட்டிகளைத் தொடர்ந்து இரண்டாம் கட்ட போட்டிகள் வரும் டிசம்பர் மாதம் நடைபெறுகிறது.

இப்போட்டியில் பங்கேற்கும் அனைத்து மாணவர்களுக்கும் பரிசுகள் வழங்கபடவுள்ளதாக இடைநிலைக் கல்வித் திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...