தவறான சிகிச்சையால் கல்லூரி உதவி பேராசிரியர் உயிரிழப்பு ?


நீலகிரி மாவட்டம், குயில்ஹில் பகுதியைச் சேர்ந்தவர் பாலு. இவரது மனைவி வைலட். இவர்களது இளைய மகள் அருள்மொழி மற்றும் மூத்த மகள் கவிதா (24). 

கவிதா சென்னையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் உதவிப் பேராசிரியராக பணியாற்றி வந்தார். இந்நிலையில், கல்லூரி விடுமுறைக்காக நீலகிரி மாவட்டத்திற்கு வந்துள்ளார். அப்போது அவருக்கு காய்ச்சல் ஏற்படவே பாலு, குன்னூரியில் செயல்படும் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் கவிதாவுக்கு மருந்து கொடுத்துள்ளனர். வீட்டிற்கு வந்த கவிதா மருந்தினை உட்கொண்ட சில நிமிடங்களிலேயே உடல் முழுவதும் அழற்சி ஏற்பட்டு, கை, கால்கள் கருப்பு நிறத்தில் மாறியுள்ளது. மீண்டும், அந்த மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தும் அழற்சி அதிகரித்துள்ளது.

இதைத்தொடர்ந்து கவிதா, கோவையில் செயல்படும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வந்த நிலையில் வியாழனன்று உடல் நிலை மிகவும் மோசமடைந்து பரிதாபமாக அவர் உயிரிழந்தார்.

இதுகுறித்து, அவரது பெற்றோர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்ததைத் தொடர்ந்து, உடலைக் கைப்பற்றிய காவல் துறையினர் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

தொடர்ந்து, வழக்கு பதிவு செய்த காவலர்கள் குன்னூர் தனியார் மருத்துவமனை மருத்துவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...