மாநகராட்சி அலுவலகத்தில் சுவச் சர்வேக்ஷன் 2017 கருத்தரங்கு நிகழ்ச்சி

கோவை மாநகராட்சி கூட்டரங்கில் இன்று காலை தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் சமூக அமைப்புக்கள் சார்பில் சுவத் சர்வேக்ஷன் 2017  கருத்தரங்கு நிகழ்ச்சி கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் விஜயகார்த்திகேயன் முன்னிலையில் நடைபெற்றது. 



ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் நடைபெறும் சுவச் சர்வேக்ஷன் கீழ் 500 நகரங்கள் மற்றும் அந்தந்த நகர்ப்புறம், சுகாதார நிலைகள் அடிப்படையில் மதிப்பீட்டு தரவரிசை வழங்கப்படும். இதில் மாநகராட்சி நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களில் தூய்மை செய்வதற்காக அப்பகுதிகளுக்கு செய்யப்பட்ட பணிகள் மூலம் மக்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் அப்பகுதிகளை தரவரிசை மதிப்பீடு வழங்கப்படும். 



மேலும், இதில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட நகரங்கள், பாரம்பரியம் மற்றும் சுற்றுலா நகரங்கள், குறைவான ஒரு லட்சம் மக்கள் தொகை கொண்ட நகரங்களில் இருந்து ஜனவரி 2017 இல் நடத்தப்படும் இந்த ஆய்வில் எடுத்துக் கொள்ளப்படவில்லை. இதற்கான ஆய்வில் தன்னார்வ தொண்டு நிறுவனங்களான நம்ம கோவை அணி, கோ கோயமுத்தூர் அணி, சுவட்ச் பாரத் தூதுவர்கள் போன்ற பல்வேறு நிறுவனங்கள் கலந்து கொண்டனர். இதில் இவர்களுக்கு நகரின் கிராமப்புற மற்றும் நகர்ப்புற பகுதிகளில் உள்ள சுகாதார நிலைகளில், சுத்தமாக வைக்க பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், திறந்தவெளி கழிப்பறைகள் பற்றிய பிரச்சாரம் போன்றவற்றை கூட்டத்தில் பேசப்பட்டது.

Newsletter

கற்பகம் பொறியியல் கல்லூரியில் YUVA 2026 நிகழ்ச்சி: UPSC வெற்றியாளர் சிறப்புரை

கோவை, ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் செப்டம்பர் 9, 2026 அன்று நடைபெற்ற YUVA 2026 – Freshmen In...

கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

அரசாணைகளின்படி அரசு அலுவலகங்களில் அம்பேத்கர், பெரியார், அண்ணா, காமராஜர் உள்ளிட்ட சகிக்க நீதி தலைவர்களின் படங்களை வைக்க வ...

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...