மனைவி இறந்த வருத்தத்தில் கணவர் தற்கொலை ?



விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சசிகுமார் (35). கோவையில் பி.என்.புதூர் அருகே வாடகைக்கு வீடெடுத்து தங்கி கால் டாக்சி ஓட்டுநராக பணியாற்றி வந்தார். 

இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக இவரது வீட்டின் கதவு பூட்டியே இருந்துள்ளது. இதைத்தொடர்ந்து, அவரது வீட்டின் உரிமையாளர் தினேஷ்குமார் வீட்டின் கதவருகே சென்றபோது அங்கு துர்நாற்றம் வீசியுள்ளது.

இதைத்தொடர்ந்து, தினேஷ்குமாருக்கு சந்தேகம் ஏற்படவே வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளார். அப்போது அங்கு சசிகுமார் தூக்கிட்ட நிலையில் தற்கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து சாய்பாபா காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

தொடர்ந்து இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவலர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு சசிகுமாரின் மனைவி உயிரிழந்துவிட்டதால் அவர் மனமுடைந்து  தற்கொலையில் ஈடுபட்டிருக்கலாம் என்ற கோணத்தில்  விசாரணை நடைபெற்று வருகிறது.

Newsletter

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...

கோவை சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95% பணிகள் நிறைவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95% நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம், மின்வி...

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...