டிரம்பை மோசமானவராக எண்ண வேண்டாம்: ஒபாமா

லிமா: டொனால்டு டிரம்பை மோசமானவராக கருத வேண்டாம் என்று லத்தீன் அமெரிக்கா மற்றும் உலக நாடுகளுக்கு அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா வலியுறுத்தி உள்ளார்.

ஆசிய பசிபிக் பொருளாதார மாநாடு தென் அமெரிக்காவின் பெரு நாட்டில் நடைபெற்று வருகிறது. தலைநகர் லிமாவில் நடைபெறும் இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஒபாமா கலந்து கொண்டார். லிமாவில் இளைஞர்களுடன் நடைபெற்ற கேள்வி பதில் நிகழ்ச்சியில் ஒபாமா பேசுகையில், வெள்ளை மாளிகையில் பணியாற்ற அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள டொனால்டு டிரம்புக்கு தகுதி இல்லை என்ற தவறான முடிவுக்கு வர வேண்டாம்.

டிரம்பை மோசமானவராக கருத வேண்டாம். நிர்வாகம் எப்படி நடத்துகிறார் என்பதை பார்க்கும் வரை காத்திருங்கள். 

உலக நாடுகள் அமைதியாக, செழிப்புடன் ஒற்றுமையாக வாழும் பொருட்டு அவருடன் நிர்வாகம் இருக்கிறதா? இல்லையா என்று பார்த்து பின்னர் தீர்மானியுங்கள். புதிய அதிபர் குறித்து உலக நாடுகள் உடனடியாக எந்த முடிவுக்கும் வர வேண்டாம். இது உலக நாடுகள் மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கு முக்கியமானதாகும் என்றார். அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு முன் டிரம்ப்பை கடுமையாக விமர்சித்து வந்த ஒபாமா, தேர்தலுக்கு பிறகு அவருக்கு ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் கற்பகம் பார்மசி கல்லூரியில் 325 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

கோவை ஒத்தக்கால் மண்டபத்தில் கற்பகம் பார்மசி கல்லூரியின் பட்டமளிப்பு விழா-2026 மே 2 ஆம் தேதி நடைபெற்றது. 242 பி.பார்ம், 6...

காதல் விவகாரத்தில் தற்கொலை குறுஞ்செய்தி அனுப்பிய கோவை கல்லூரி மாணவி மாயம்

கோவையில் தனியார் மருத்துவமனையில் பயிற்சி பெற்று வந்த கேரளாவைச் சேர்ந்த 23 வயதான கல்லூரி மாணவி மாயமான சம்பவம் பரபரப்பை ஏற...

கோவையில் 16 மையங்களில் இன்று நீட் தேர்வு: 7,181 பேர் பங்கேற்பு

கோவை மாவட்டத்தில் இன்று நடைபெறும் நீட் (NEET) நுழைவுத் தேர்வில், 16 மையங்களில் 298 அரசு பள்ளி மாணவர்கள் உட்பட மொத்தம் 7,...

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...

கட்டாஞ்சிமலை: குட்டையில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் குட்டையில் காருடன் மூழ்கி 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து ப...

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...