பாகிஸ்தான் கடற்படையினர் நடவடிக்கை இந்திய மீனவர்கள் 43 பேர் கைது

பாகிஸ்தான் கடற்பகுதியில் மீன்பிடித்ததாக கூறி 43 இந்திய மீனவர்களை பாகிஸ்தான் கடற்படையினர் கைது செய்தனர்.  இந்தியாவை சேர்ந்த மீனவர்களை பாகிஸ்தானும், பாகிஸ்தானை சேர்ந்த மீனவர்கள் இந்திய கடல் எல்லையிலும் அத்துமீறியதாக கைது செய்யப்படுவது தொடர்கதையாகி வருகின்றது. இந்த நிலையில் பாகிஸ்தான் நாட்டின் சிந்து மாகாணத்தை ஒட்டிய அரபிக்கடற்பகுதியில் நேற்று இந்திய மீனவர்கள் சிலர் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு ரோந்து சென்ற பாகிஸ்தான் கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இந்திய மீனவர்களின் படகுகளை சிறைப்பிடித்தனர்.

அதில் இருந்த 43 மீனவர்களை கைது செய்து கராச்சிக்கு அழைத்து சென்றனர். இதையடுத்து அவர்கள் மீது மீனவர்கள் சட்டம் மற்றும் வெளிநாட்டினர் சட்டத்தின் கீழ் துறைமுகம் பகுதி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கைது செய்யப்பட்ட மீனவர்கள் இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுவார்கள் என தெரிகிறது.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...