அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு ஏடிஎம் இயந்திரத்தில் முழு ஊதியம் வரும்படி மாற்று ஏற்பாடு செய்ய மாவட்ட ஆட்சியரிடம் மனு

பண நோட்டுக்களை மாற்றும் விவகாரம் முடிவுக்கு வரும் வரை ஆசிரியர்கள் உள்ளிட்ட அரசு ஊழியர்களுக்கு ரொக்கமாக ஊதியத்தை வழங்க வேண்டும் எனவும், ஏடிஎம் இயந்திரத்தில் முழு ஊதியம் வரும்படி மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் தமிழ்நாடு கலை ஆசிரியர்கள் நலச்சங்கம் சார்பில் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து, தமிழ்நாடு கலை ஆசிரியர்கள் நலச்சங்கத்தின் தலைவர் ராஜ்குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''கருப்புப் பணம் ஒழிப்பு நடவடிக்கையாக தற்போது 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது எனவும், குறிப்பிட்ட காலத்தில் அதனை மாற்றிக் கொள்ள வேண்டும் எனவும் பிரதமர் மோடி அறிவித்துள்ளார். மேலும், 2000 ரூபாய் நோட்டு புதிதாக அறிமுகம் செய்யப்பட்டு தற்போது மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. 

ஆனால், நாளொன்றிற்கு 2000 ரூபாய் மட்டுமே ஏடிஎம்களில் எடுக்க முடியும் என்பதால் அரசு ஊழியர்கள் தங்களது பணிகளை விட்டுவிட்டு, விடுப்பு எடுத்து பணத்திற்காக ஏடிஎம் மையங்களில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. 

இந்த பிரச்சனைகளால் ஒட்டுமொத்தமாக அரசு இயந்திரமே ஸ்தம்பிக்கும் நிலை உள்ளதால் சிறப்பு சலுகையாக இம்மாத ஊதியத்தை மாவட்ட கருவூலங்களில் அரசு ஊழியர்கள் ரொக்கமாக பெற்றுக்கொள்ளவும், ஏடிஎம் இயந்திரத்தில் முழு ஊதியம் வரும்படி மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும்.

மேலும், வங்கி ஊழியர்கள் தங்களது பணத்தை தாங்கள் பணியாற்றும் வங்கிகளிலேயே மாற்றிக்கொள்ளும் வாய்ப்பு இருப்பதை கருத்தில் கொண்டு இந்த கோரிக்கையை அரசு பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று அவர் கூறினார்.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...