நேரு குழுமங்களின் சார்பாக நேரு மேலாண்மை திறன்மேம்பாட்டு மையம் துவக்க விழா


கோவையில் நேரு குழுமங்களின் சார்பாக புதனன்று (இன்று) நேரு மேலாண்மை திறன்மேம்பாட்டு மையம் துவக்க விழா ஏ.டி.டி காலனி பகுதியில் உள்ள கேரளா கிளப்பில் நடைபெற்றது. இதனை நேரு குழுமத்தின் செயலாளர் மற்றும் தலைமை செயல் அலுவலர் கிருஷ்ணகுமார் துவங்கி வைத்தார்.

பின்னர் அவர் பேசுகையில்; நேரு மேலாண்மை திறன்மேம்பாட்டு மையம் தற்போது பணிபுரியும் மேலாளர்களுக்கு புத்துணர்வும், அவர்களை புதுப்பித்துக் கொள்ளவும் இம்மையம் உதவும். மேலும் இம்மையம் இளைய தலைமுறைகளுக்கு மேலாளர்கள் திறமைகளை பெருக்கி, துல்லியமாய் தொலைநோக்கு பார்வைகளோடு செயல்பட மேடை அமைத்து தருகிறது. 

இந்த மையம் சரியான மனப்பாங்கையும், எல்லையற்ற நம்பிக்கையும் தான் நிறுவனங்களில் வெற்றிக்கு வழிவகுக்கிறது. இவை இல்லையென்றால், சர்வதேச நிறுவனங்களில் போட்டியிடையில் நிறுவனம் வளர்வதும், தொடர்வதும் கனவாய் போய்விடுகிறது. இதனை உலகளவில் சிறந்த நிறுவனங்களில் நிலைநிறுத்த அவசியமான அடிப்படையில் கவனம் செலுத்துகிறது எனக் கூறினார். 

 

ஒரு நாள் பயிற்சிகள் நடத்தப்படும் தலைப்புகள்:-

1. அனுதினம் கணக்கு பதிவு

2. நிதி ஒரு தொழில்

3. பயிற்சி மற்றும் மேம்பாடு

4. சமூக வலைதள சந்தையிடல்

5. சந்தை ஆராய்ச்சி

இரு நாள் பயிற்சிகள் நடத்தப்படும் தலைப்புகள்:-

1. பட்ஜெட் மற்றும் முன்கணிப்புகள்

2. இடர் மேலாண்மை

3. மேலண்ஸ் ஸ்கோர் கார்டு

4. சமூக ஊடக கருவிகளின் திறனறிதல்

ஒரு வாரம் பயிற்சிகள் நடத்தப்படும் தலைப்புகள்:-

1. மேலி அடிப்படை 9.94

2. பணி திறனாய்வு

3. நிறுவன கலந்தாய்வு முறைகள்

4. பைலட் ஆய்வு

புதுமுக மேலாளர் எனத்தொடங்கி அனுபவம் பெற்ற மேலாளர் வரை பயனுரும் வகையில் இந்த பயிற்சிகள் அமைந்துள்ளன.

இந்த விழாவில் பாரதியார் பல்கலைக் கழக முன்னாள் மேலாண்மை துறை இயக்குநர் இரா.வெங்கடபதி, நேரு கல்விக் குழும முதல்வர் எஸ்.பிரான்க்லின் ஜான் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Newsletter

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...