கோவையில் திமுகவினர் 1000 ரூபாய் நோட்டின் மாதிரியை பாடை கட்டி ஆர்ப்பாட்டம்!

கோவையில் மத்திய அரசை கண்டித்து திமுக சார்பில் நடத்தப்பட்ட மனித சங்கிலி போராட்டத்தில் ஆயிரக்கணக்கான திமுகவினர் கலந்து கொண்டனர். போராட்டத்தின் போது திமுகவினர் 1000 ரூபாய் நோட்டின் மாதிரியை பாடை கட்டி எடுத்து வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.



பழைய 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என கடந்த 8ம் தேதி மத்திய அரசு அறிவித்தது.இந்த அறிவிப்பினால் அனைத்து தொழில்களும் பாதிக்கப்பட்டதுடன், பழைய நோட்டுகளை மாற்றுவதற்கு மக்கள் அலைந்து திரியவேண்டி இருந்தது. இந்நிலையில் மத்திய அரசின் இந்த நடவடிக்கையை கண்டித்து அரசியல் கட்சிகளும், தொழிற்சங்கத்தினரும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் ஓரு பகுதியாக தி.மு.க சார்பில் இன்று மாநிலம் முழுவதும் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்று வருகின்றது. கோவையில் நஞ்சப்பா சாலையில் துவங்கி கிராஸ்கட் வீதி வரை திமுகவினர் திரண்டு நின்று மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். திமுக முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி தலைமையில் நடந்த இந்த மனித சங்கிலி போராட்டத்தில் மாநகர் முழுதும் இருந்து திமுகவினர் கலந்து கொண்டனர். அப்போது பேட்டியளித்த பொங்கலூர் பழனிச்சாமி, மத்திய அரசின் இந்த நடவடிக்கையால் பொதுமக்களும் வியாபாரிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் விரைவில் 500 ரூபாய், 100 ரூபாய், 50 ரூபாய் அதிகளவு புழக்கதில் விட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர், 1000 ரூபாய் நோட்டின் மாதிரி ஒன்றை பாடையில் கட்டி எடுத்து வந்து சங்கு ஊதியும், மேளம் முழங்கவும் ஒப்பாரி வைத்தனர். இதனால் போராட்டத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.



Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...