மாநகராட்சி ஆணையர் உத்தரவால் 452 குடிநீர் இணைப்புகள் துண்டிப்பு


கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் உத்தரவின் பேரில் மாநகராட்சி வரி செலுத்தாத 452 குடிநீர் இணைப்புகள் அக்டோபர் 27ம் தேதி முதல் நவம்பர் 23ம் தேதி வரை துண்டிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பெட்ரோல் பங்க், தபால் நிலையம், பாலகம், மின்சாரக் கட்டணம் உள்ளிட்ட இடங்களில் நவம்பர் 24ம் தேதி நள்ளிரவு வரை மாற்றிக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி, கோவை மாநகராட்சியின் சார்பில் மின்சாரக் கட்டணம், குடிநீர் வரி, சொத்துவரி உள்ளிட்டவற்றை பழைய 500, 1000 ரூபாய் நோட்டுக்களிலேயே செலுத்தலாம் என மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் அறிவித்திருந்தார். 

இதனிடையே, கடந்த அக். 27ம் தேதி முதல் நவ. 23ம் தேதி வரை மாநகராட்சிக்குட்பட்ட 5 மண்டலங்களில் மாநகராட்சி வரி செலுத்தாமல் இருந்த வரிதாரர்களின் 452 குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளது.

மத்திய மண்டலம் 51-ஆம் வார்டு பகுதியில் 2013 முதல் 2017 வரை மாநகாட்சி வரியாக 2 லட்சத்து 52 ஆயிரத்து 340 ரூபாய் செலுத்தாத வணிக வளாகத்தின் முன்பு மாநகராட்சி குப்பைத் தொட்டிகள் வைக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 



அக்கடையின் உரிமையாளர் உரிய வரிப்பணத்தினை செலுத்தியபின் அந்த குப்பைத் தொட்டிகள் அங்கிருந்து அகற்றப்படும் என மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவையில் கற்பகம் பார்மசி கல்லூரியில் 325 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

கோவை ஒத்தக்கால் மண்டபத்தில் கற்பகம் பார்மசி கல்லூரியின் பட்டமளிப்பு விழா-2026 மே 2 ஆம் தேதி நடைபெற்றது. 242 பி.பார்ம், 6...

காதல் விவகாரத்தில் தற்கொலை குறுஞ்செய்தி அனுப்பிய கோவை கல்லூரி மாணவி மாயம்

கோவையில் தனியார் மருத்துவமனையில் பயிற்சி பெற்று வந்த கேரளாவைச் சேர்ந்த 23 வயதான கல்லூரி மாணவி மாயமான சம்பவம் பரபரப்பை ஏற...

கோவையில் 16 மையங்களில் இன்று நீட் தேர்வு: 7,181 பேர் பங்கேற்பு

கோவை மாவட்டத்தில் இன்று நடைபெறும் நீட் (NEET) நுழைவுத் தேர்வில், 16 மையங்களில் 298 அரசு பள்ளி மாணவர்கள் உட்பட மொத்தம் 7,...

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...

கட்டாஞ்சிமலை: குட்டையில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் குட்டையில் காருடன் மூழ்கி 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து ப...

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...