கோவை அரசு பொது மருத்துவமனையில் இருதய மற்றும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை விரைவில் துவங்கப்படும்

கோவை அரசு பொது மருத்துவமனையில் செயல்படும் சிறுநீரக பிரிவு, இருதய சிகிச்சை பிரிவில் கூடியவிரைவில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மற்றும் திறந்த நிலை இருதய அறுவை சிகிச்சை முறை துவங்கப்படும் என அம்மருத்துவமனையின் டீன் எட்வின் ஜோ தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து நமது நிருபரிடம் அவர் கூறியதாவது:-

கோவை அரசு பொது மருத்துவமனையில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மற்றும் திறந்த நிலை இருதய அறுவை சிகிச்சை துவங்க விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. 

இந்த விண்ணப்பம் சென்னை தலைமையகத்திற்கு அனுப்பப்பட்டு தற்போது ஆய்வில் உள்ளது. அங்கிருந்து அனுமதி வந்தவுடன் மேற்குறிப்பிட்ட அறுவை சிகிச்சைகள் துவங்கப்பட்டு விடும். டிசம்பர் மாதம் இறுதிக்குள் அனுமதி வழங்கப்படுவதாக தகவல் வந்துள்ளது. 

தனியார் மருத்துவமனையில் சிறுநீரக மாற்று, இருதய சிகிச்சைகளுக்கு குறைந்தது சுமார் 3.5 லட்சம் ரூபாய் முதல் 4 லட்சம் ரூபாய் வரை செலவாகும். அரசு பொது மருத்துவமனையில் முதல்முறையாக துவங்கப்படும் இந்த சிகிச்சை மூலம் முதல்வர் காப்பீட்டுத் திட்டத்தில் விண்ணப்பித்து ஏழை, எழிய மக்கள் மிகுந்த பயனடைவர். 

சிகிச்சைக்கான பயனாளர்கள் குறித்தும் பெயர் தேர்வு செய்யப்பட்டு தலைமையகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. அதற்கான ஆய்வு முடிந்து சென்னையில் இருந்து நிதி வந்தவுடன் அறுவை சிகிச்சை துவங்கப்படும்'' என கோவை அரசு பொது மருத்துவமனை டீன் எட்வின் ஜோ தெரிவித்தார்.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...