தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளின் குடும்பத்திற்கு ரூ.15 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என திருநாவுக்கரசர் வலியுறுத்தல்

தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளுக்கு தமிழக அரசு எந்த இழப்பீடும் வழங்கவில்லை என குற்றம்சாட்டிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர், தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் குடும்பங்களுக்கு தலா 15 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டுமென வலியுறுத்தினார்.

கோவையில் நடைபெறும் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க வருகைதந்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முறையாக மேற்கொள்ளாமல் அவசர கோலத்தில் ஐநூறு மற்றும் ஆயிரம் ரூபாய் செல்லாது என மத்திய அரசு அறிவித்ததால் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். மேலும், பணப் பிரச்சனை 50 நாட்களில் தீர வாய்ப்பில்லை. பணப்புழக்கம் சீரடைய 7 மாதங்கள் ஆகும் என்றார்.

மேலும், பண விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பேச ஏன் பயப்படுகிறார் என கேள்வி எழுப்பிய அவர், ஜனநாயகத்தை மதித்து பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் விளக்கம் அளிக்க வேண்டுமென வலியுறுத்தினார். சாதாரன மக்கள் பிரச்சனையை என்னிப் பார்க்காமல் கருப்பு பணத்தை ஒழித்து விட்டோம் என்பது வேடிக்கையானது.

பணம் எடுப்பதற்கு தினம்தினம் புதிய உத்தரவுகளை பிறப்பித்து மத்திய அரசு மக்களை குழப்பி வருகிறது. புதிய 2 ஆயிரம் ரூபாய் தாள்கள் அவசியம் அற்றது. இந்த தாள்கள் கருப்பு பணம் பதுக்கலை மேலும் எளிதாக்கும். புதிய 500 மற்றும் ஆயிரம் ரூபாய் தாள்களை அதிகளவில் புழக்கத்தில் விட நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தினார். 

இதைத்தொடர்ந்து, பயிர்கள் கருகுவதை பார்த்து தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளுக்கு தமிழக அரசு எந்த இழப்பீடும் வழங்கவில்லை. தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் குடும்பங்களுக்கு தலா 15 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டுமென வலியுறுத்தினார். மேலும், விவசாயிகள் தற்கொலைகளை தடுக்க கூட்டுறவு மற்றும் தேசிய வங்கிகளில் பெற்ற கடனை ரத்து செய்ய வேண்டும் என்றார். 

மேலும், தமிழகத்தில் தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், பொது அமைதி மற்றும் சட்டம் ஒழுங்கு பாதுகாப்பது தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டுமென தெரிவித்தார்.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...