தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சியினை பார்வையிட்ட அமைச்சர் எஸ்.பி.வேலுமணி




கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் பகுதியில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி மற்றும் அதிநவீன மின்னனு வாகனம் மூலம் சாதனை விளக்க குறும்படம் ஒளிபரப்பப்பட்டு வருவதை நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பார்வையிட்டார். 



இந்த புகைப்படக் கண்காட்சியில் தேசிய தலைவர்கள் தமிழக முதலமைச்சரை சந்தித்து வளர்ச்சித் திட்டங்கள் குறித்த நிகழ்ச்சி புகைப்படங்களும், முதலமைச்சர் ஜெயலலிதா துவக்கி வைத்த நலத்திட்டங்கள், அரசு விழாக்கள், தமிழக அரசின் சிறப்புத்திட்டங்கள் உள்ளிட்ட அரசின் பல்வேறு சாதனைகளை விளக்கும் வகையில் புகைப்படங்கள் இடம் பெற்றிருந்தன. இதனை அப்பகுதி மக்கள் ஆர்வமுடன் கண்டுரசித்தனர்.

இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆர்.கனகராஜ், அம்மன் கே.அர்ஜுனன், எட்டிமடை சண்முகம், கஸ்தூரிவாசு, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித்தலைவர் ஆர்.ஏ.சக்திவேல், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் லெ.பாண்டி, உதவி செய்திமக்கள் தொடர்பு அலுவலர் அ.சுகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...