கே.எம்.சி.எச் மருத்துவமனை சார்பில் பெண் காவல்துறையினருக்கு இலவச மருத்துவ முகாம்

கே.எம்.சி.எச் மருத்துவமனை சார்பில் பெண்களுக்கான மார்பகம் மற்றும் கர்ப்பப்பை புற்றுநோய் இலவச விழிப்புணர்வு முகாம் கோவை காவலர் பயிற்சிப் பள்ளி அரங்கத்தில் இன்று நடைபெற்றது. முகாமினை கோவை மாநகர காவல்துறை ஆணையர் அமல்ராஜ் துவங்கி வைத்தார். 


பின்னர், அவர் பேசுகையில்:-
பெண்கள் பலர் தங்களது உடல் ஆரோக்கியத்தை பற்றி கண்டுகொள்வதில்லை. மருத்துவர்களின் ஆலோசனைப்படி நடப்பதன் மூலம் பெண்களுக்கு ஏற்படும் மார்பகம் மற்றும் கர்ப்பப்பை புற்றுநோய் பாதிப்பு வராமல் தடுக்க முடியும். இன்றைய தொழில்நுட்பத்தின் மூலம் 100 சதவீதம் வரை பல்வேறு வகையான புற்றுநோய்களை குணப்படுத்த முடியும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். மேலும், கிராமப்புறத்தில் உள்ள பெண்களுக்கு இது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை கே.எம்.சி.எச் மருத்துவமனை நடத்துகிறது. 



இன்று கே.எம்.சி.எச் மருத்துவமனை நடத்தும் இம்முகாமில் கோவை காவலர் பயிற்சிப் பள்ளியில் உள்ள பெண் காவல்துறையினர் மற்றும் அவர்களது குடும்பத்தினர் கலந்து கொண்டு பரிசோதனை செய்து கொள்ளவேண்டும் அதுமட்டுமல்லாமல், இந்த விழிப்புணர்வு பற்றி உங்களுக்கு தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் அனைவருக்கும் கொண்டு சேர்க்கவேண்டும் எனக் கூறினார்.  

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...