கோவையில் நடமாடும் மக்கள் குறைதீர்க்கும் வாகனத்தை அமைச்சர் கொடியசைத்து துவக்கி வைத்தார்

கோயம்புத்தூர் மாநகராட்சி அலுவலத்தில் நடமாடும் மக்கள் குறைதீர்க்கும் வாகனத்தை நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இன்று (03.12.2016) கொடியசைத்து துவக்கி வைத்து பார்வையிட்டார்.இதனைத் தொடர்ந்து கோயம்புத்தூர் மாநகராட்சி அலுவலகக் கூட்டரங்கில்  நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் சிறப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.



அமைச்சர் பேசுகையில், தமிழக முதலமைச்சர் ஏழை எளிய மக்கள் ஏற்றம் பெற வேண்டுமென்று பல்வேறு அரசு நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகின்றார்கள். இந்தியாவிலேயே தமிழகத்தை போல் வேறு எந்த மாநிலத்திலும் இது போன்ற திட்டங்கள் இல்லை. பொது மக்களின் குறைகளை உடனடியாக தீர்வு காணும் விதமாக தமிழக முதலமைச்சர் ஆணைக்கிணங்க இன்று (03.12.2016) கோவை மாநகராட்சியில் நடமாடும் மக்கள் குறைதீர்க்கும் வாகனம் துவக்கி வைக்கப்பட்டது.

மேலும், தமிழகத்தில் மழை குறைவாக உள்ளதால், பொது மக்கள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தவேண்டும். மேலும் மாநகராட்சி அதிகாரிகள் குடிநீரை பொது மக்களுக்கு சீரான முறையில் விநியோகிக்க வேண்டும். குறிப்பாக மழைகாலம் என்பதால் மாநகராட்சி அதிகாரிகள் மிகவும் கவனத்துடன் செயல்பட்டு, போர்க்கால அடிப்படையில் தயார் நிலையில் இருக்க வேண்டும். கோவை மாநகராட்சியில் குடிநீர் குழாய்கள், தெரு விளக்குகள், சாலை பழுதுகள் ஏற்பட்டால் அதை உடனடியாக சரிசெய்ய வேண்டும். இவ்வாறு மாண்புமிகு நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் தெரிவித்தார்.

மேலும், மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் அவர்களின் தெரிவிக்கையில் “மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் அவர்கள் தலைமையில் ஐந்து மண்டலங்களிலுள்ள உதவி ஆணையாளர்களின் மேற்பார்வையில் நடமாடும் மக்கள் குறைதீர்க்கும் வாகனம் செயல்படும். இந்த வாகனமானது ஐந்து மண்டலங்களிலும் திங்கள் முதல் வெள்ளி வரை, அதாவது  திங்கட்கிழமை அன்று மத்திய மண்டலத்திற்கும், செவ்வாய் கிழமை அன்று கிழக்கு மண்டலத்திற்கும், புதன் கிழமை அன்று மேற்கு மண்டலத்திற்கும், வியாழக்கிழமை அன்று தெற்கு மண்டலத்திற்கும், வெள்ளிக் கிழமை அன்று வடக்கு மண்டலத்திற்கும் நாள்தோறும் அந்தந்த வார்டுகளுக்குச் சென்று பொது மக்களிடம் மனுக்கள் பெறப்பட்டு, மாலை 4.00 மணியளவில் அந்தந்த மண்டல அலுவலகத்திற்கு வந்து சேரும். மேற்கண்ட ஐந்து மண்டலங்களின் அலுவலகத்திற்கு தினமும் மாலை 4.30 மணியளவில் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் நேரடியாகச் சென்று பொது மக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்களின் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, கீழ்குறிப்பிட்ட நேரங்களில் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் அவர்களிடமும் பொது மக்கள் தங்கள் மனுக்களை நேரடியாகவும் வழங்கலாம்.



நடமாடும் மக்கள் குறைதீர்க்கும் வாகனம் செல்லும் இடங்களின் விவரம்
திங்கட்கிழமை 
மத்திய மண்டலம்
காலை 10.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை
மாநகராட்சி பிரதான அலுவலகம் மாலை 4.30 மணி

செவ்வாய்க்கிழமை 
கிழக்கு மண்டலம்
காலை 10.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை
கிழக்கு மண்டல அலுவலகம் மாலை 4.30 மணி

புதன் கிழமை
மேற்கு மண்டலம்
காலை 10.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை
மேற்கு மணடல அலுவலகம் மாலை 4.30 மணி

வியாழக்கிழமை 
தெற்கு மண்டலம்
காலை 10.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை
தெற்கு மண்டல அலுவலகம் மாலை 4.30 மணி

வெள்ளிக்கிழமை 
வடக்கு மணடலம்
காலை 10.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை
வடக்கு மண்டல அலுவலகம் மாலை 4.30 மணி

இந்த வாகனமானது ஐந்து மண்டலங்களிலும் தினமும் ஒவ்வொரு வாரந்தோறும் திங்கள் முதல் வெள்ளி வரை தொடர்ந்து செல்லும். இவ்வாறு அவர் தெரிவித்தார். 

இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் டாக்டர்.க.விஜயகார்த்திகேயன், கோவை பாராளுமன்ற உறுப்பினர் பி.நாகராஜ், சட்டமன்ற உறுப்பினர்கள் பி.ஆர்.ஜி.அருண்குமார், அம்மன்.கே.அர்ஜுனன், வி.சி.ஆறுக்குட்டி, அ.சண்முகம், துணை ஆணையாளர் காந்திமதி அவர்கள், அனைத்து உதவி ஆணையாளர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...