ரூபாய் நோட்டு தடையின் மூலம் கார்ப்ரேட்டுக்கு பெரிய லாபமும், மக்களுக்கு பெரும் சுமையும் ஏற்படுத்துவதே மோடியின் திட்டம் - பி.ஆர். நடராஜன்


பண மதிப்பு நீக்க உத்தரவால் கடந்த மூன்று வாரங்களாக கடுமையான பதிப்பு நாடு முழுவதும் ஏற்பட்டுள்ளது. தொழில் நகரமான கோவை. மோடி அரசின் உத்தரவால் தொழிற்துறை, வர்த்தகம், கட்டுமான தொழில்கள் ஆகியவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் வர்த்தக நிறுவனங்களில் வியாபாரம் பாதியாக குறைந்துள்ள நிலையில் தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என சிபிஎம் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் அறிக்கை விடுத்துள்ளார்.a

இதுகுறித்து சிபிஎம் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மத்தியில் ஆளும் பாஜக அரசு முன் தயாரிப்பு இல்லாமலும் போதிய அளவு புதிய பணம் அச்சிட்டு வங்கிகளுக்கு பணம் அனுப்பாமல் பழைய ரூ.500, 1000 செல்லாது என்று உத்தரவிட்டதைத்தொடர்ந்து வங்கிகள், வங்கி ஊழியர்கள் பல்வேறு வகையில் கடும் நெருக்கடியை சந்தித்து வருகின்றனர்.

செல்லாத நோட்டுகள் பெருமளவு வங்கிகளுக்கு வந்துவிட்ட நிலையில் நிறுவனங்களுக்கும், மக்களுக்கும் பணம் திரும்ப வழங்கக் கூடிய அளவிற்கு தற்போது வங்கிகளுக்கு போதிய நிதி இல்லாமல் அனைத்து தரப்பினரும் தவித்து வருகின்றனர். 

கோவையில் 58 கிளைகளுடன் செயல்படக் கூடிய ஒரு வங்கிக்கு 300 கோடி தேவையென்றால் 30 கோடி மட்டுமே அனுப்பி வைக்கப்படுவதால் வாடிக்கையாளர்களுக்கு தற்போது மோடி அரசு அறிவித்துள்ள தொகையை கூட வழங்க முடியாமல் வங்கி ஊழியர்களும், வாடிக்கையாளர்களும் சண்டையிட்டுக்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது.

500க்கும் மேற்பட்ட ஏடிஎம்களில் எஸ்.பி.ஐ வங்கியின் ஏடிஎம்களை தவிர இதர ஏடிஎம்கள் பணம் இல்லை என்ற போர்டு தொங்குகிறது. வங்கிகளில் போதிய பணம் இல்லாத காரணமாக வாடிக்கையாளர்கள் வாரம் 24 ஆயிரம் எடுக்கலாம் என்ற அறிவிப்பு வெற்று அறிவிப்பாகவே உள்ளது. பண நெருக்கடியில் நாடே தவிக்கும் போது பிக் பஜார் போன்ற கார்ப்ரேட் தனியார் நிறுவனங்களின் வியாபாரத்தை பாதுகாக்க பழைய நோட்டுகளை மாற்றிக்கொள்ள அனுமதி அளித்துள்ளது மோடி அரசு.

மோடி அரசின் ஸ்வைப்மெசின் திட்டத்தின் மூலம் ஒவ்வொருமுறையும் பொருள் வாங்கும் போது இரண்டரை சதவிகிதம் பணம் பிடித்தும் செய்யப்படும். இதன் மூலம் கார்ப்ரேட் நிறுவனங்களுக்கு பெரிய லாபமும், மக்களுக்கு பெரும் சுமையும் ஏற்படுத்தும் திட்டம் தான் மோடியின் பண மதிப்பு நீக்க உத்தரவு. நாட்டின் தேவைக்கு ஏற்றவாறு பணத்தினை அச்சடிக்காமல் கேஷ்லாஸ் திட்டம் என்ற பெயரில் பெரிய கார்ப்ரேட் நிறுவனங்களுக்கு வர்த்தகத்திற்கு சாதகமாக மின்னனு பண பரிமாற்றம் என்ற பெயரில் சிறு, குறு வியாபாரிகளை இல்லாமல் செய்யும் மோடி அரசின் மோசடி திட்டத்தை அனைத்து தரப்பு மக்களும், வன்மையாக கண்டிக்க முன் வர வேண்டும். 

வருமான வரித்துறையினர் பல்வேறு இடங்களில் கருப்புப் பணம் குறித்த தகவலையடுத்து சோதனை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. ஆனால் அந்த சோதனையில் எவ்வளவு பணம் கைப்பற்றப்பட்டது, சம்பந்தப்பட்ட நபர் யார் என்ற விபரங்கள் வெளியிடப்படுவதில்லை. இதுபோன்ற ரகசியம் காப்பது பதுக்கல் நடவடிக்கையில் ஈடுபட்டவர்களை அரசு மறைமுகமாக பாதுகாக்கிறதோ என்கிற எண்ணம் ஏற்படுவதாக உள்ளது.

உடனடியாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தப்பட்ட விபரங்களை ஊடகங்கள் வாயிலாக வெளிப்படுத்தப்பட வேண்டும்.'' இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Newsletter

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...

கோவை சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95% பணிகள் நிறைவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95% நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம், மின்வி...