தவறான வதந்திகளை பரப்பும் செய்தியாளர் மீது நடவடிக்கை கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு

கோவை மாவட்டம், வடவள்ளி பகுதிகளைச் சேர்ந்த தொழுநோயால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்களுக்கு உதவி செய்து வரும் சுகாதார மையம் குறித்து தவறான வதந்திகளை பரப்பும் செய்தியாளர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.



இதுகுறித்து அம்மனுவில் கூறியுள்ளதாவது:-

தொழு நோயால் பாதிக்கப்பட்ட நாங்கள் சுமார் 125 குடும்பத்தினர் தங்களது குடும்பத்தினரால் ஒதுக்கப்பட்டு கோவை வடவள்ளி அருகே கடந்த 40 வருடமாக வசித்து வருகிறோம். நாங்கள் வசிக்கும் பகுதியின் அருகில் தொழு நோயால் பாதிக்கப்பட்டவர்களுககு உதவி செய்யும் வகையில் கிராம சமூக சுகாதார மையம் கடந்த 16 ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்டது.

அந்த மையத்தின் மூலமாக எங்களுக்கு மாதந்தோறும் உணவுப் பொருட்கள், மருத்துவ வசதி மற்றும் தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் குழந்தைகளுக்கு படிப்பு வசதி அனைத்தும் தற்போது வரை செய்துவருகிறார்கள்.

தற்போது எங்களுக்கு உதவி செய்யும் சுகாதார மையத்தின் மீது வி.சியாம் என்பவர் தவறான வதந்திகளை செய்தி பத்திரிகையிலும் மற்றும் சமூக வலைதளத்திலும் பரப்பி உள்ளார். இதனால், 125 குடும்பங்களும் பாதிக்கப்பட்டுள்ளன.

ஆகவே, சியாம் மீதும், அந்த செய்தி பத்திரிகை நிருபர் மீதும் கோவை மாவட்ட ஆட்சியர் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...